News March 22, 2025
டிராக்டர் மோதி மூதாட்டி பலி

கள்ளக்குறிச்சியை அடுத்த அசகளத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் கிளியம்மாள்(70). இவர் நேற்று மாலை, தனது மகளுடன் வெளியே சென்று விட்டு வீடு திரும்பி கொண்டிருந்தார். மேட்டுக்காலனி பேருந்து நிறுத்தம் அருகே சென்றபோது பதிவு எண் இல்லாத டிராக்டர் டிப்பர் பின்பக்கம் வந்து மோதியது. இதில் நிகழ்விடத்திலேயே கிளியம்மாள் உயிரிழந்தார். இதுகுறித்து வரஞ்சரம் போலீசார் விசாரிக்கின்றனர்.
Similar News
News March 23, 2025
கள்ளச்சாராய வழக்கில் கைதான மூவருக்கு நீதிமன்ற காவல்

கள்ளசாராய வழக்கில் கள்ளக்குறிச்சி டி.எஸ்.பி., தேவராஜ் மூவரிடமும் தனி, தனியாக விசாரணை மேற்கொண்ட நிலையில், போலீஸ் காவல் நேற்றுடன் முடிந்தது. கள்ளக்குறிச்சி முதலாவது குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நேற்று(மார்.22) ஆஜர்படுத்தப்பட்ட மூவரையும் வரும் 4ம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க, நீதிபதி (பொறுப்பு) ரீனா உத்தரவிட்டார்.
News March 23, 2025
கள்ளக்குறிச்சி: வனக்காப்பாளருக்கு துப்பாக்கிச் சூடு

கள்ளக்குறிச்சி, உளுந்துார்பேட்டை அருகே கல்லமேடு கிராமத்தைச் சேர்ந்த வேல்முருகன், கிருஷ்ணாபுரம் பிரிவு வனக்காப்பாளரான இவர், நேற்று(மார்.21) முன்தினம் இரவு கீழ்குப்பம் அடுத்த பாக்கம்பாடி ஆட்டுப்பண்ணை காப்புக்காட்டில் ரோந்து சென்றார். அப்போது வன விலங்குகளை வேட்டையாடிய நபர்களை பிடித்த போது வனக்காப்பாளரை துப்பாக்கியால் சுட்டு தப்பிய இருவரில், ஒருவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News March 23, 2025
தர்பூசணி சாப்பிடுபவர்களுக்கு எச்சரிக்கை

ரசாயனம் கலக்கப்பட்ட தர்பூசணியை சாப்பிடும்போது நெஞ்செரிச்சல், செரிமான கோளாறு, புற்றுநோய் போன்ற ஆபத்துகள் வருமென மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். தர்பூசணி பழங்களை வெட்டி பஞ்சு, டிஷ்யூ பேப்பர் ஆகியவற்றை கொண்டு துடைத்தால் சிவப்பு நிறம் அதில் ஒட்டிக் கொண்டால் அது ரசாயன கலப்பு கொண்ட பழம். எனவே, கடைகளில் வாங்கும்போது அதில் எங்காவது துளையிடப்பட்டு இருக்கிறதா என்பதை மக்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.