News April 25, 2025

ஜம்மு காஷ்மீர்; உயிர் தப்பித்த 6 பேர்

image

ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் கடந்த 22ஆம் தேதி நடத்திய தாக்குதலில், சுற்றுலா பயணிகள் 26 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை சேர்ந்த சையத் காஜா பாஷா(55), ராஜா(44) உள்ளிட்ட 6 பேர் காஷ்மீரை சுற்றிப் பார்க்க சென்றிருந்தனர். அங்கு துப்பாக்கிச் சூடு நடைபெற்றதை அறிந்து, அங்கிருந்து தப்பி சென்றனர். இதையடுத்து தமிழக அரசின் உதவியுடன் நேற்று சென்னை வந்தடைந்தனர்.

Similar News

News April 27, 2025

நீட் தேர்வுக்கான இலவச மாதிரித் தேர்வு

image

இந்த ஆண்டு நீட் நுழைவு தேர்வு மே 4ஆம் தேதி நடைபெறுகிறது. இதை ஒட்டி திண்டிவனம் Dr.அப்துல்கலாம் நீட் பயிற்சி மையம் சார்பில் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு 30.04.2025 அன்று காலை 10மணி முதல் 1மணி வரை இலவச நீட் மாதிரித் தேர்வு நடத்தப்படுகிறது. நீட் தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் இவ்வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளலாம் என பயிற்சி மைய நிர்வாகி சுப்பிரமணியன் தெரிவித்தார். தொடர்புக்கு: 9942132049/6380044810

News April 27, 2025

ரயிலில் தனியாக பயணிக்கும் பெண்கள் கவனத்திற்கு

image

பாலியல் அத்துமீறல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதனால், ரயிலில் தனியாக பயணிக்கும் பெண்கள், ரயில்களில் அல்லது ரயில் நிலையங்களில் பாலியல் சீண்டல்களை எதிர்கொண்டால் 9962500500 என்ற எண்ணுக்கு உடனே அழைக்கவும். ரயில்வே காவல் உதவி எண் 1512 என்ற எண்ணுக்கும் தொடர்பு கொள்ளலாம். தனியாக செல்லும் பெண்கள் இந்த நம்பர்களை உங்கள் மொபைலில் கட்டாயம் வைத்து கொள்ளுங்கள். உங்கள் தோழிகளுக்கு ஷேர் பண்ணுங்க

News April 27, 2025

கேட்ட வரம் தரும் அற்புத கோவில்

image

விழுப்புரம் மாவட்டம் திரு.வி.க. சாலையில் அமைந்துள்ள பெரியநாயகி சமேத கயிலாசநாதர் ஆலயம் மிகவும் பிரசித்தி பெற்றது. திருமண வரம் வேண்டுவோர், இங்குள்ள துர்க்கைக்கு 11 வாரம் நெய் விளக்கேற்றி, எலுமிச்சை மாலை அணிவித்தால் திருமணத்தடை நீங்கும். அதேபோல, தட்சிணாமூர்த்திக்கு நான்கு வாரம் நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் விரும்பிய வரம் கிடைப்பதாக பக்தர்கள் நம்புகின்றனர். ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!