News March 17, 2025
சேலம் ரயில் பயணிகள் கவனத்திற்கு

ஈரோடு சந்திப்பிலிருந்து காலை 8.10 மணிக்கு புறப்பட வேண்டிய ரயில் எண்.56106 ஈரோடு – திருச்சிராப்பள்ளி பயணிகள் ரயில் நாளை 18.03.2025 ஈரோடு கரூர் இடையே பகுதியளவு ரத்து செய்யப்படும். இந்த ரயில் ஈரோட்டில் இருந்து கரூர் சந்திப்புக்கு இயக்கப்படாது; அன்று கரூரில் இருந்து காலை 09.30 மணிக்கு புறப்பட்டு திருச்சிராப்பள்ளி சந்திப்பு வரை இயங்கும் என சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Similar News
News March 17, 2025
சேலம்: கைதான பாஜகவினர் விடுதலை

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் கைதை கண்டித்து தமிழகம் முழுவதும் பாஜகவினர் போராட்டம் நடத்தி வரும் நிலையில், சேலம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர் கைது செய்யப்பட்டனர். தற்போது அண்ணாமலை விடுதலை செய்யப்பட்ட நிலையில் சேலத்தில் கைது செய்யப்பட்ட பாஜகவினர் அனைவரையும் போலீசார் விடுவிட்டனர்.
News March 17, 2025
சேலம் : ஆன்லைனில் வாங்குவோர் கவனத்திற்கு

சேலம் : மாவட்ட காவல்துறை சார்பாக தினமும் விழிப்புணர்வு புகைப்படம் வெளியிடப்பட்டு வருகிறது. அதுபடி இன்று(மார்ச் 17) அதிக தள்ளுபடி போன்ற விளம்பரங்களை நம்பி அங்கீகரிக்கப்படாத ஆன்லைன் விற்பனை தளங்களில், உங்களது வங்கி சார்ந்த தகவல்களை சேமித்து வைக்கவோ அவற்றை நம்பி உங்கள் பணத்தை இழந்து விடவோ வேண்டாம். என்கிற போஸ்டை காவல்துறையின் சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
News March 17, 2025
சேலம்: இன்றைய இரவு காவலர் ரோந்து பணியின் விவரம்

சேலம் மாநகரில் இன்று (17.3-2025) இரவு 11 முதல் காலை 6 மணி வரை ஊரகம், சங்ககிரி, ஆத்தூர், மேட்டூர், வாழப்பாடி ஆகிய உட் கோட்டாவில் இரவு ரோந்து பணிகளில் ஈடுபடுபவர்கள் காவலரின் விவரங்கள் மேலே குறிப்பிட்ட உள்ள புகைப்படத்தில் உள்ளது. பொதுமக்கள் தங்களது அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்தில் அழைக்கலாம். தொடர்பு எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளது.