News March 19, 2025

சேலம் மார்ச் 19 இன்றைய முக்கிய நிகழ்வுகள்

image

சேலம் மார்ச்19 இன்றைய முக்கிய நிகழ்வுகள்▶️ காலை 11 மணி ஏற்காடு ஊராட்சியில் மக்களை தேடி சட்டத்தின் கீழ் (மாவட்ட ஆட்சியர் மனு முகாம்) ▶️காலை 11 மணி மும்மொழி கொள்கை எதிர்த்து இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம் (கோட்டை மைதானம்) ▶️மாலை 4 மணி பணி நிரந்தரம் கோரி அங்கன்வாடி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் (மாவட்ட ஆட்சியாளர் அலுவலகம்) ▶️மாலை 6 மணி அரசு தற்காலிக பணியாளர்கள் கோட்டை மைதானத்தில் ஆர்ப்பாட்டம்.

Similar News

News March 19, 2025

3 கொலையாளிகள் சுட்டுப் பிடிப்பு

image

ஈரோடு மாவட்டம், நசியனூர் அருகே சேலம் கிச்சிப்பாளையத்தைச் சேர்ந்த ரவுடி ஜான் இன்று கொலை செய்யப்பட்ட நிலையில், அதில் தொடர்புடைய 3 பேரை போலீசார் சுட்டுப் பிடித்தனர். சதீஷ், சரவணன், பூபாலன் ஆகிய 3 பேர் போலீசாரை தாக்கிவிட்டுத் தப்ப முயன்றதால் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. மற்றொரு கொலையாளி கார்த்திகேயன் கையில் காயத்துடன் பிடிபட்டுள்ளார்.

News March 19, 2025

சேலம் திருநங்கைகளுக்கான சிறப்பு முகாம்  எங்கு? எப்போது

image

சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் பிருந்தா தேவி வெளியிட்டுள்ள அறிக்கையில் மாவட்டத்தில் உள்ள திருநங்கைகள் கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் அவர்களுக்கு அடையாள அட்டை, ஆதார் அட்டை உள்ளிட்டவற்றை புதுப்பிக்க திருத்தம் செய்ய வருகின்ற ▶️19ஆம் தேதி ஓமலூர்▶️20 ஆம் தேதி எடப்பாடி ▶️21-ஆம் தேதி சேலம் ▶️22-ஆம் தேதி கொளத்தூர் ▶️24 தேதிஆத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

News March 19, 2025

கணவன் உயிரிழப்பு- மனைவிக்கு சிகிச்சை

image

சேலம் கிச்சிப்பாளையத்தைச் சேர்ந்த ஜான் என்கிற சாணக்கியன்- ஆதிரா தம்பதி தங்களது காரில் திருப்பூரை நோக்கி சென்றுக் கொண்டிருந்தது. அப்போது, ஈரோடு மாவட்டம், நசியனூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் காரை வழிமறித்த கும்பல், தம்பதியைக் கொடூரமாக வெட்டியது. சம்பவ இடத்திலேயே கணவர் ஜான் உயிரிழந்தார். மனைவி ஆதிரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

error: Content is protected !!