News April 4, 2025
சேலம் மாணவி மரணம்: அரசுக்கு இபிஎஸ் கேள்வி!

“நீட் பயிற்சியில் அதிக மதிப்பெண் எடுக்க முடியாததால் சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள கொங்கணாபுரம் பகுதியைச் சேர்ந்த சத்யா என்ற மாணவி தன் உயிரை மாய்த்துக் கொண்டதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது;நீட் தேர்வை வைத்து இன்று வரை அரசியல் செய்யும் திமுக, தங்கள் ஆட்சியில் 20 பேர் நீட் தேர்வு அச்சத்தால் உயிரிழந்துள்ளதற்கு என்ன பதில் சொல்லப் போகிறது?” என அதிமுக. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி
Similar News
News April 5, 2025
சனி, ஞாயிறுகளில் வரி வசூல் மையங்கள்!

சேலம் மாநகராட்சிக்குட்பட்ட சொத்து உரிமையாளர்கள் நடப்பாண்டிற்கான தங்களது சொத்து வரியை ஏப்ரல் 30ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. மேலும், https://tnurbanepay.tn.gov.in என்ற இணைய வழி பரிவர்த்தனை மூலம் பணம் செலுத்தலாம். மேலும், பொதுமக்கள் நலன் கருதி வருகிற ஏப்ரல் 30ஆம் தேதி வரை சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அனைத்து வரி வசூல் மையங்களும் செயல்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
News April 5, 2025
சேலத்தில் இலவச வேலைவாய்ப்பு திறன் பயிற்சி!

சேலம் அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் கைக்கடிகாரம் மற்றும் கடிகாரம் பழுதுபார்க்கும் 3 மாத கால இலவச பயிற்சிக்கான சேர்க்கை நடைபெறவுள்ளது. இப்பயிற்சிக்கு நேரடியாகவோ (அ) இந்த <
News April 5, 2025
சேலத்தில் உலகிலேயே மிகப்பெரிய நந்தி!

சேலம் மாவட்டம், மேட்டுப்பட்டி சுங்கச்சாவடியில் இருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ள வெள்ளாளக்குண்டம் கிராமத்தில் உலகிலேயே மிகப்பெரிய நந்தி சிலை அமைக்கப்பட்டுள்ளது. 45 அடி உயரம் கொண்ட அதிகார நந்தி சிலையின் வயிற்று பகுதியில் பக்தர்கள் சென்று தியானம் செய்ய தியான மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அதிகார நந்திச் சிலையை சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் நேரில் சென்று பார்த்து வருகின்றனர்.