News April 23, 2025

சேலம் அரசு மருத்துவமனைகளில் ஓராண்டில் 14,000 பிரசவங்கள்

image

கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் நடப்பாண்டு மார்ச் மாதம் வரை சேலம் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் 5,001 பிரசவங்களும், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 9,774 பிரசவங்கள் என மொத்தம் 14,775 பிரசவங்கள் நடைபெற்று உள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பாதுகாப்பான முறையில் பிரசவம் நடக்க அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். 

Similar News

News April 30, 2025

ரூ.6,000 ஊக்கத்தொகையுடன் சேலத்தில் இலவச பயிற்சி

image

சேலம் மாணவ, மாணவிகளுக்கு தமிழ்நாடு திறன் மேம்பாட்டு பயிற்சி கழகம் சார்பில் இலவச சாஃப்ட் ஸ்கில் (Soft skills) பயிற்சி வகுப்புகளை நடைபெறவுள்ளது. இந்த பயிற்சி வகுப்புகள் மூலம், மாணவர்கள் 20 நாட்களில் நேர்காணல்களில் பங்கேற்பதற்கான திறன்களைப் பெற முடியும். மேலும், பயிற்சி முடிவில் ரூபாய் 6,000 ஊக்கத்தொகையும் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு 9500980430, 9443207802 என்ற எண்களை அழைக்கலாம்.

News April 30, 2025

இரண்டு வயது குழந்தை சாதனை பலரும் வாழ்த்து தெரிவித்து கொண்டாட்டம்

image

சேலம் மாவட்டம் குகை பகுதியை சேர்ந்தவர் சதீஷ் மோனிகா தம்பதியினர். இந்த தம்பதியின் 2 வயது குழந்தை தாரிக்க
‘இன்டர்நேஷனல் புக் ஆப் ரெக்கார்டில்’ இடம் பெற்றுள்ளார். பல்வேறு தலைப்புகளில் பேசி பல மொழிகளை கற்றுள்ளார். இவரின் இந்த செயல் இந்த பகுதி மக்களிடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இரண்டு வயது குழந்தைக்கு பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.

News April 30, 2025

இளைஞரை பீர் பாட்டிலால் தாக்கிய 4 பேர் கைது

image

சேலம் அருகே எருமாபாளையம் பகுதியை சேர்ந்தவர் சூர்யா(21). சீலநாயக்கன்பட்டியில் உள்ள பழைய இரும்பு கடையில் பணிபுரிந்து வருகிறார். இந்தநிலையில் கடந்த 27-ஆம் தேதி, ஏரிக்கரையில் 4 பேர் சூர்யாவுடன் தகராறில் ஈடுபட்டதுடன், பீர் பாட்டிலால் தலையில் தாக்கினர். இந்த சம்பவம் தொடர்பாக கிச்சிப்பாளையம் போலீசார் மதன், குரு, பிரசாத் உள்ளிட்ட 4 பேரை நேற்று கைது செய்தனர்.

error: Content is protected !!