News March 19, 2025
சேலம் GH-ல் பாலியல் தொல்லை? 3 மணி நேர தொடர் விசாரணை

சேலம் அரசு மருத்துவமனையில் தூய்மை மேற்பார்வையாளராக பணியாற்றிய 30 வயது பெண்ணுக்கு, ஒப்பந்த நிறுவனத்தின் அதிகாரிகள் மூன்று பேர் பாலியல் தொல்லை கொடுத்ததாக கலெக்டர் மற்றும் கமிஷனரிடம் புகார் வழங்கப்பட்டது. இது தொடர்பாக குழு அமைக்கப்பட்டது. இதனையடுத்து பாதிக்கப்பட்ட பெண்ணிடம் 3 மணி நேரம் விசாரணை நடத்தினர். தொடர்ந்து அறிக்கை சென்னைக்கு அனுப்பப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News March 19, 2025
நம்ம ஊரு திருவிழாவில் நாளை கடைசி நாள்

தமிழ்நாடு அரசின் கலை பண்பாட்டுத் துறையின் சார்பில் சங்கமம் நம்ம ஊரு திருவிழாவுக்கான கலைக்குழுக்கள் தேர்வு சேலம் மாவட்டத்தில் வரும் 22, 23-ந் தேதிகளில் நடக்கிறது. மாவட்ட அளவிலான தேர்வில் பங்கு பெற விரும்பும் கலைக் குழுக்கள் கலை பண்பாட்டு துறையின் இணையதளத்தில் www.artandculture.tn.gov.in மூலம் நாளை (வியாழக்கிழமை) மாலைக்குள் விண்ணப்பிக்கலாம் என சேலம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
News March 19, 2025
ஆர்ப்பாட்டம் நடத்த 5 நாட்களுக்கு முன் அனுமதி பெற வேண்டும்

சேலம் மாநகரில் அரசியல் கட்சிகள் மற்றும் சங்கங்கள் சார்பில் நடைபெறும் ஆர்ப்பாட்டம், போன்றவற்றை நடத்துவதற்கு, சேலம் மாநகர காவல் ஆணையாளர் அனுமதி பெற்ற பிறகே நடத்த வேண்டும். குறைந்தபட்சம் 5 நாட்களுக்கு முன் விண்ணப்பித்து, அனுமதி பெற வேண்டும். இந்த உத்தரவு 19ம் தேதி (இன்று) நள்ளிரவு முதல் ஏப்ரல் 2ம் தேதி வரை அமலில் இருக்கும் என சேலம் மாநகர ஆணையாளர் பிரவீன்குமார் அபினபு தெரிவித்துள்ளார்.
News March 19, 2025
கோடை வெயில்- பொதுமக்களுக்கு சேலம் ஆட்சியர் வேண்டுகோள்

பொதுமக்கள் கோடை வெப்பத்தின் தாக்கத்திலிருந்து பாதுகாத்துக் கொள்ள அதிக அளவிலான நீர் பருக வேண்டும், சூடான பானங்கள் மற்றும் குளிர்பானங்கள் பருகுவதைத் தவிர்த்து அதிக அளவில் மோர், இளநீர், உப்பு மற்றும் மோர் கலந்த அரிசிக் கஞ்சி, உப்பு கலந்த எலுமிச்சை பழச்சாறு ஆகியவற்றைப் பருக வேண்டும். மேலும் தேவையின்றி வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும் என பொதுமக்களுக்கு சேலம் ஆட்சியர் பிருந்தாதேவி வேண்டுகோள்