News April 28, 2025
சென்னையில் ‘ரெட் பட்டன் ரோபோட்டிக் காப்’ அறிமுகம்

சென்னை பெருநகர காவல் ஆணையரின் உத்தரவின் பேரில், பொதுமக்கள் பாதுகாப்பிற்காக 200 ‘ரெட் பட்டன்-ரோபோட்டிக் காப்’ சாதனங்கள் நகரின் முக்கிய இடங்களில் நிறுவப்படுகின்றன. 24×7 கண்காணிப்பு, அவசர அழைப்பு வசதி, வீடியோ கால் மூலம் காவல் துறை உதவி போன்ற அம்சங்கள் உள்ள இந்த சாதனம், பெண்கள் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. *நண்பர்களுக்கு பகிர்ந்து தெரியப்படுத்துங்கள்*
Similar News
News April 28, 2025
சென்னை இரவு ரோந்துப் பணி போலீசாரின் விவரம்

சென்னை போலீசாரின் “Knights on Night Rounds” (28.04.2025) இன்று இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை செயல்படுகிறது. ஒவ்வொரு பகுதியிலும் அதிகாரிகள் வாகனத்தில் ரோந்துப் பணியில் ஈடுபடுவர். அவசர காலங்களில் தொடர்பு கொள்ள நேரடி மொபைல் எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அசம்பாவிதம் நிகழ்ந்தால் மேலே உள்ள எண்களை அழைக்கலாம். *இரவில் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு கட்டாயம் உதவும், பகிரவும்*
News April 28, 2025
சென்னையில் பாகிஸ்தான் நபர் உயிரிழப்பு

சென்னை அமிஞ்சிக்கரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த பாகிஸ்தானியர் உயிரிழந்தார். உடனிருந்த அவரது தாயிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மருத்துவ பரிசோதனைகளுக்குப் பிறகு மரண காரணம் வெளியிடப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இறந்தவரையும் அவரது தாயாரையும் பாகிஸ்தான் அனுப்பும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.
News April 28, 2025
தாம்பரம் – திருச்சி இடையே சிறப்பு ரயில்

கோடை விடுமுறையையொட்டி சென்னை தாம்பரம் – திருச்சி இடையே நாளை (ஏப்ரல் 29) முதல் ஜூன் 29ஆம் தேதி வரை இருமார்க்கத்திலும் வாரத்தில் 5 நாட்கள் சிறப்பு ரயில் இயக்கப்படும் எனத் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. திருச்சியில் இருந்து அதிகாலை 5.35 மணிக்கு புறப்படும் இந்த ரயில், மதியம் 12.30 மணிக்கு தாம்பரம் வரும். தாம்பரத்தில் இருந்து மதியம் 3.45 மணிக்கு புறப்பட்டு, இரவு 10.40 மணிக்கு திருச்சி சென்றடையும்.