News March 29, 2025
சென்னையில் பிரபல பைக் திருடன் கைது

சென்னையின் பல்வேறு இடங்களில் தொடர்ந்து பைக்குகளை குறிவைத்து திருட்டில் ஈடுபட்டு வந்த, சோளிங்கர் பகுதியைச் சேர்ந்த இம்ரான் (33) என்பவரை போலீசார் இன்று (மார்.29) கைது செய்துள்ளனர். மேலும், அவரிடம் இருந்து 8 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தேனாம்பேட்டையில் பைக்கை திருடி, புதுப்பேட்டையில் பழைய வாகனங்களின் உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் கடையில் கொடுத்தபோது போலீசாரிடம் பிடிபட்டார்.
Similar News
News April 2, 2025
பிரபல பிலால் ஓட்டலில் சாப்பிட்ட 8 பேருக்கு வாந்தி

சென்னை மவுண்ட் ரோடில் உள்ள பிரபல பிலால் தனியார் ஓட்டலில் சாப்பிட்ட கல்லூரி மாணவிகள் உட்பட 8 பேருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, வாந்தி மயக்கத்திற்கு உள்ளன 8 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக ஐஸ் ஹவுஸ் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பிரியாணியால் இவ்வாறு நடந்ததா? என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
News April 2, 2025
CISF கான்ஸ்டபிள் டிரேட்ஸ்மேன் ஆட்சேர்ப்பு

மத்திய தொழில் பாதுகாப்பு படையில் (CISF) 1161 கான்ஸ்டபிள் டிரேட்ஸ்மேன் பதவிகளுக்கான ஆட்சேர்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. சமையல்காரர், காலணி தைப்பவர், முடி திருத்துபவர், சலவை செய்பவர், ஓவியர், எலக்ட்ரீஷியன், தோட்டக்காரர், வெல்டர், தச்சர் பதவிகள் அடங்கும். அதிகபட்சமாக 493 பதவிகள் சமையல்காரருக்கானவை. பெண் விண்ணப்பதாரர்களும் இந்த ஆட்சேர்ப்புக்கு விண்ணப்பிக்கலாம். நாளை (ஏப்ரல் 3) கடைசி தேதி. <
News April 2, 2025
சென்னையில் மழைக்கு வாய்ப்பு

வளிமண்டலத்தில் சாதகமான சூழல் ஏற்பட்டுள்ளதால், தமிழகத்தில் வரும் 5ஆம் தேதி வரை மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று (ஏப்ரல் 2) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. எனவே, முன்னெச்சரிக்கையாக குடை எடுத்துச் செல்லுங்கள். ஷேர் செய்யுங்கள்