News March 18, 2025
சென்னையில் நாளை ஆட்டோக்கள் ஓடாது

தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர் சம்மேளனத்தின் செயல் தலைவர் எஸ்.பாலசுப்பிரமணியம் செய்தியாளர்களிடம் பேசுகையில், விலைவாசி உயர்வுக்கேற்ப மீட்டர் கட்டணத்தை உயர்த்த உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன்படி ஆட்டோ சங்கங்களுடனான பேச்சுவார்த்தையில் 1.5 கி.மீ.க்கு ரூ.50, அடுத்தடுத்த கி.மீ.க்கு ரூ.25 என நிர்ணயிக்க வலியுறுத்தி வரும் மார்ச் 19ஆம் தேதி தொழிற்சங்கம் போராட்டத்தை அறிவித்தது.
Similar News
News March 19, 2025
பேராசிரியரை சரமாரியாக தாக்கிய மாணவர்கள்

சென்னை அருகே இயங்கி வரும் ஹிந்துஸ்தான் பல்கலைக்கழத்தில் பணிபுரியும் பேராசிரியைக்கு அதே பல்கலைக்கழத்தில் பணிபுரிந்த பேராசிரியர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனை அறிந்த மாணவர்கள் பேராசிரியரை சரமாரியாக தாக்கினர். பின்னர் பேராசிரியரை பிடித்து தாம்பரம் படூர் போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதனால் பல்கலைகழக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
News March 19, 2025
டிஜிட்டல் முறையில் ஸ்மார்ட் பார்க்கிங் வசதி ஏற்படுத்தப்படும்

மாநகராட்சி பட்ஜெட்டில், பெருநகர சென்னை மாநகராட்சியின் சிறந்த வாகனப் போக்குவரத்து மேலாண்மைக்காக, டிஜிட்டல் முறையில் ஸ்மார்ட் பார்க்கிங் வசதி பொது மற்றும் தனியார் பங்களிப்பு (Public Private Partnership) முறையில் அமைக்கப்படும். இதனால் வாகன நெரிசல்கள் குறைவதுடன் பெருநகர சென்னை மாநகராட்சிக்கு கூடுதல் வருவாய் ஏற்படுத்தப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
News March 19, 2025
பெட்ரோல், டீசல் வாகனங்கள் படிப்படியாக மாற்றம்

இன்று சென்னை மாநகராட்சியின் நிதி நிலை அறிக்கை ரிப்பன் கட்டிட வளாகத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதில் சென்னை மாநகராட்சியில் பல்வேறு பணிகளுக்காக பயன்படுத்தப்படும் டீசல் மற்றும் பெட்ரோல் வாகனங்களினால் ஏற்படும் காற்று மாசை குறைக்கும் வகையில் அவை அனைத்தும் படிப்படியாக இயற்கை எரிவாயு (சிஎன்ஜி) மற்றும் மின்சாரம் மூலம் இயங்கும் வகையில் மாற்றம் செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது.