News April 16, 2025
சென்னை மாநகராட்சியின் அதிரடி அறிவிப்பு

சென்னையில் ஏப்.21-ம் தேதிக்கு பிறகு கட்டடக் கழிவுகளை பொது இடங்களில் கொட்டினால் டன் ஒன்றுக்கு ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும் என கூடுதல் ஆணையர் அறிவித்துள்ளார். மேலும், 1 டன் அளவுக்கு கட்டடக் கழிவுகள் இருந்தால் சென்னை மாநகராட்சி இலவசமாக அகற்றும். 1 முதல் 20 டன் வரை கட்டடக் கழிவுகளை அகற்ற ரூ.3,300 கட்டணம் வசூலிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். *சென்னை வாசிகளுக்கு பகிர்ந்து உஷார் படுத்துங்கள்*
Similar News
News April 19, 2025
கிண்டியில் மூலிகை சோப்பு பயிற்சி

கிண்டியில் உள்ள வேளாண் பல்கலையின் தகவல் மற்றும் பயிற்சி மையத்தில் வரும் 25ம் தேதி, மூலிகை சோப்பு தயாரிக்கும் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. அதில், பஞ்ச காவ்யா, ஆரஞ்சு, வாழைப்பழம் மிக்சிங், ரோஸ், சந்தனம், ஆவாரம்பூ, கற்றாழை, அதிமதுரம், பீட்ரூட் உள்ளிட்டவற்றைப் பயன்படுத்தி மூலிகை சோப் தயாரிப்பு பயிற்சி வழங்கப்பட உள்ளது. மேலும் விபரங்களுக்கு, 044 29530048 என்ற எண்ணை அழைக்கலாம். *நண்பர்களுக்கு பகிரவும்*
News April 19, 2025
இயற்கை எழில் கொஞ்சும் தியாசபிகல் சொசைட்டி

அன்னிபெசன்ட் அம்மையாரால் 1875ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட பிரம்மஞான சபையின் தலைமையகம் ‘தியாசபிகல் சொசைட்டி’ சென்னை அடையாறு பகுதியில் உள்ளது. சமத்துவத்தை போற்றும் விதமாக உருவாக்கப்பட்ட இந்த சபை, தற்போது இயற்கை எழில் கொஞ்சும் பூங்காவாகவும் விளங்குகிறது. உலகப் புகழ்பெற்ற அடையாறு ஆலமரமும் இந்த பூங்காவில் அமைந்துள்ளது. உயிர்களின் பல்லுயிர்த் தன்மைக்கு அடையாளமாகவும் இந்தப் பூங்கா திகழ்கிறது.
News April 19, 2025
பீக் ஹவரில் குடிநீர் லாரிகளுக்கு தடை

சென்னையில் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துகளை தவிர்க்க, ‘பீக் ஹவர்’ நேரங்களில் குடிநீர் லாரிகள் சில பகுதிகளில் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. திருவொற்றியூர், மணலி, மாதவரம் உள்ளிட்ட 6 மண்டலங்களுக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ள நிலையில், மற்ற மண்டலங்களில் மாற்று வழித்தடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. லாரிகள் GPS மூலம் கண்காணிக்கப்படும். குறிப்பாக, விதிமுறைகளை மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும்.