News April 6, 2025

சென்னை உயர்நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு

image

சென்னை உயர்நீதிமன்றத்தில் சோப்தார், அலுவலக உதவியாளர் உள்ளிட்ட காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 392 பணியிடங்கள் உள்ளன. ரூ.15,700 – ரூ.58,100 சம்பளம் வழங்கப்படும். 8 முதல் 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே இதற்கு விண்ணப்பிக்க முடியும். விருப்பமுள்ளவர்கள் இந்த <>லிங்கை <<>>கிளிக் செய்து வரும் மே மாதம் 5ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்.

Similar News

News April 17, 2025

அங்கன்வாடி பணி: விண்ணப்பிப்பது எப்படி?

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 322 அங்கன்வாடி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. விண்ணப்பதாரர்கள், இந்த<> லிங்கை கிளிக் <<>>செய்து விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து, வரும் 23ஆம் தேதிக்குள் தங்களது வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகத்தில் நேரில் சமர்ப்பிக்க வேண்டும். கணவனை இழந்த அல்லது ஆதரவற்ற பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். 25-35 வயதுடைய பெண்கள் விண்ணப்பிக்கலாம். ஷேர் செய்யுங்கள்.

News April 17, 2025

அதிவேக வாகனங்களுக்கு அபராதம்- உஷார்

image

சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் அதிக வேகத்தில் செல்லும் வாகனங்களுக்கு ரேடார் கருவி மூலம் கண்காணித்து, இ-சலான் முறையில் அபராதம் விதிக்கப்படும் நடவடிக்கையை ராணிப்பேட்டை வட்டாரப் போக்குவரத்து அலுவலர் ஜி. மோகன் மேற்கொண்டுள்ளார். வாகன உரிமையாளர்களுக்கு குறுஞ்செய்தி மூலம் அபராத விவரங்கள் அனுப்பப்படுகிறது. விபத்துகளைத் தடுக்கும் முயற்சியாக இதை மேற்கொண்டு வருவதாக அவர் கூறினார். ஷேர் பண்ணுங்க. 

News April 17, 2025

100 நாள் வேலையில் தகராறு; விபரீதத்தில் முடிந்த பிரச்சனை

image

பாணாவரம் அருகே மனைவியிடம் தகராறில் ஈடுபட்டதை தட்டிக்கேட்ட கணவரின் விரல் துண்டான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வித்யா மற்றும் விஜய சாந்தி ஆகியோருக்கு 100 நாள் வேலையின் போது தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் அவர்களது கணவன் மார்களுக்கு ஏற்பட்ட பிரச்சனையில், விஜய சாந்தி கணவரின் கை விரல்களை வித்யாவின் கணவர் கத்தியால் வெட்டியுள்ளார். மேலும் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

error: Content is protected !!