News April 24, 2025
சென்னை இரவு ரோந்துப் பணி போலீசாரின் விவரம்

சென்னை போலீசாரின் “Knights on Night Rounds” இன்று (23.04.2025) இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை செயல்படுகிறது. ஒவ்வொரு பகுதியிலும் அதிகாரிகள் வாகனத்தில் ரோந்துப் பணியில் ஈபடுவர். அவசர காலங்களில் தொடர்பு கொள்ள நேரடி மொபைல் எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அசம்பாவிதம் நிகழ்ந்தால் மேலே உள்ள எண்களை அழைக்கலாம். இரவில் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு கட்டாயம் உதவும். பகிரவும்
Similar News
News April 24, 2025
பாலியல் தொழில் நடத்திய 2 பேர் கைது

சாலிகிராமம் பகுதியில் பாலியல் தொழில் நடப்பதாக விபச்சார தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, நேற்று (ஏப்ரல் 23) அந்த இடத்தில் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது, அங்குள்ள ஒரு வீட்டில் பாலியல் தொழில் நடப்பது உறுதி செய்யப்பட்டது. வீட்டை வாடகைக்கு எடுத்து பாலியல் தொழில் நடத்தி வந்த இருவரை போலீசார் கைது செய்தனர். பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட 2 பெண்கள் மீட்கப்பட்டனர்.
News April 23, 2025
அமெரிக்க தூதரகத்தில் இளவச சம்மர் கிளாஸ்

சென்னை அமெரிக்க தூதரகத்தில், கோடை விடுமுறையை முன்னிட்டு மாணவர்களுக்கு இலவச கோடை வகுப்பு நடந்து வருகிறது. தங்களின் திறமைகளை வளர்த்துக்கொள்ள பலவகை பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. 3D பிரிண்டிங், VR கணினிகள், அறிவியல், தொழில்நுட்பம், கணிப்பொறி பாடங்கள் உள்ளிட்டவை உள்ளடக்கமாகும். இவை மே 5 வரை நடைபெறும் என தூதரகம் தெரிவித்துள்ளது. மாணவர்கள் கலந்து கொண்டு பாயான் அடையலாம்.
News April 23, 2025
காதலை கைகூட வைக்கும் கபாலீஸ்வரர்

சென்னை மைலாப்பூரில் அமைந்துள்ளது கபாலீஸ்வரர் ஆலயம். இந்த ஆலயம் முக்கியமான திருமணத்தலமாகும். இங்கு கபாலீஸ்வரரையும், கற்பகாம்பாளையும் ஒன்றாக வழிபட்டால் காதல் கைகூடும் என்பது நம்பிக்கை. இங்குள்ள வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமானை வணங்கினால் காதலும், திருமணமும் கைகூடும். மேலும் பெண்கள் தாங்கள் விரும்பும் ஆணை நினைத்து மரத்தில் மஞ்சள் கயிறு கட்டினால் காதல் வெற்றி பெறும் என்பது நம்பிக்கை. ஷேர் பண்ணுங்க