News April 25, 2025
சென்னை: ஆற்றில் மூழ்கி 3 பேர் பலி

சென்னை பூந்தமல்லி சவிதா பிசியோதெரவி கல்லூரி மாணவர்கள் கோவை ஆழியார் பகுதிக்கு சுற்றுலா சென்றனர். அப்போது, எதிர்பாராத விதமாக தருண், ரேவந்த், ஆண்டோ ஜெனிப் ஆகிய 3 பேர் ஆழியார் ஆற்றில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் கல்லூரி மாணவர்களிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. *முன் பின் தெரியாத இடத்தில் உள்ள நீர்நிலைகளில் குளிக்கும் போது கவனம் முக்கியம் என நண்பர்களுக்கு அறிவுறுத்துங்கள்*
Similar News
News April 26, 2025
இன்று உங்கள் ராகு, கேது தோஷத்தை நீக்கலாம்

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில், நவகிரகங்களில் கேது பரிகார தலமாக விளங்குகிறது. இந்தக் கோயிலில், இன்று (ஏப்.26) மாலை 4:28 மணிக்கு கும்ப ராசிக்கு ராகுவும் சிம்ம ராசிக்கு கேதுவும் பெயர்ச்சி ஆவதை முன்னிட்டு, கேது பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். இங்கு சென்று எமகண்ட நேரத்தில் கொள்ளு தானியத்தில் தீபம் ஏற்றி வழிபட்டால் சர்ப தோஷம் கேது தோஷம் நிவர்த்தி பெறலாம். SHARE பண்ணுங்க.
News April 26, 2025
சென்னை கல்லூரி மாணவர்கள் 3 பேர் உயிரிழப்பு

பூந்தமல்லி பகுதியில் உள்ள தனியார் பிசியோதெரபி கல்லூரியில் படிக்கும் மாணவ – மாணவிகள் 28 பேர், கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற கலை நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்றிருந்தனர். அப்போது ஆழியாறு ஆற்றில் குளித்து கொண்டிருந்தபோது, 4ஆம் ஆண்டு படிக்கும் ஜோசப் ஆண்டன் ஜெனிப் (21), ரேவந்த் (21), 3ஆம் ஆண்டு படிக்கும் தருண் விஸ்வரங்கன் (19) ஆகியோர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
News April 26, 2025
இரவு ரோந்துப் பணி போலீசாரின் விவரம் செயல்பாடு

சென்னை போலீசாரின் “Knights on Night Rounds” (25.04.2025) இன்று இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை செயல்படுகிறது. ஒவ்வொரு பகுதியிலும் அதிகாரிகள் வாகனத்தில் ரோந்துப் பணியில் ஈடுபடுவர். அவசர காலங்களில் தொடர்பு கொள்ள நேரடி மொபைல் எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அசம்பாவிதம் நிகழ்ந்தால் மேலே உள்ள எண்களை அழைக்கலாம். *இரவில் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு கட்டாயம் உதவும், பகிரவும்*