News March 21, 2025
சுங்கச்சாவடி ஊழியர்கள் தாக்க முயன்றதால் பரபரப்பு

சேலம், கருப்பூர் சுங்கச்சாவடியில் நேற்றிரவு அக்கவுண்ட்டில் மினிமம் பேலன்ஸ் ரூ.200 வைத்திருக்க வேண்டும் எனக்கூறி சுங்கச்சாவடி ஊழியர்கள் காரின் உரிமையாளரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வாக்குவாதம் முற்றிய நிலையில், சுங்கச்சாவடி ஊழியர்கள் இருக்கைகளைக் கொண்டு தாக்க முயன்ற சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது. விரைந்து வந்த காவல்துறையினர் இருதரப்பினரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.
Similar News
News March 30, 2025
சேலம் மாநகரில் இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம்

சேலம் மாநகரில் இன்று (30.03.2025) இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள், மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன. இதை SHARE செய்யவும்.
News March 30, 2025
சேலம் மாவட்டத்தில் இன்று பதிவான வெப்பநிலை

சேலம் மாவட்டத்தில் தொடர்ந்து 4-வது நாளாக வெப்பநிலை சதத்தைத் தொட்டுள்ளது. இன்று (மார்ச் 30) சேலத்தில் 102.2 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. நேற்று 103.6 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகியிருந்த நிலையில் இன்று சற்று குறைவாக பதிவாகியுள்ளது. சுட்டெரித்து வரும் வெயிலால் முதியவர்கள் கடும் சிரம்மமடைந்துள்ளனர்.
News March 30, 2025
சேலம்: தர்பூசணி சாப்பிடுவோர் கவனத்திற்கு

சேலத்தில் விற்பனையாகும் தர்பூசணி பழங்களில், செயற்கை நிறமூட்டி சேர்க்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக புகார் வருவதால், தர்பூசணியைப் பார்த்து வாங்க வேண்டும். நிறமூட்டி சேர்க்கப்பட்டுள்ளதா என கண்டறிய, வெட்டிய தர்பூசணியில் டிஸ்யூ பேப்பரை வைத்துத்தேய்க்க வேண்டும். நிறமூட்டி சேர்க்கப்பட்டால், அது பேப்பரில் ஒட்டிக்கொள்ளுமாம். இது குறித்து 9444042322 என்ற எண்ணுக்கு புகார் அளிக்கலாம். இதை SHARE செய்யுங்கள்.