News March 29, 2025
சிவகங்கையில் இலவச தொழில் பயிற்சி

பிள்ளையார்பட்டியில் பி.என்.பி. உழவர் பயிற்சி மையத்தில் இலவச தொழில் பயிற்சியில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.இங்கு ஒரு நாள் பயிற்சியாக ஏப்.16, 17,19,29 ல் உணவு பொருட்கள் உரிமம் பெறுதல்,லேபிளிங்,பேக்கேஜிங், நாட்டுக்கோழி வளர்ப்பு, மாட்டு சாணம் மதிப்பு கூட்டல் உள்ளிட்ட பல பயிற்சி முகாம் நடைபெறும். விரும்புவோர் 94885 75716 OR 95784 99665 ல் அழைத்து பதிவு செய்யலாம். உங்க நண்பருக்கும் பகிரவும்.
Similar News
News April 2, 2025
திருமணத் தடை நீங்க இந்த கோயிலுக்கு போங்க.!

சிவகங்கை பகுதியை ஆண்ட மன்னர் ஒருவர் சிவகங்கையில் ஒரு கோயில் எழுப்பி அந்த கோயிலுக்கு சசிவர்ணேஸ்வரர் கோயில் என பெயர் சூட்டினார். இந்த கோயிலில் உள்ள துர்க்கையம்மன் இடது காலை மடித்து, காலுக்கு கீழே அசுரனை கிடத்திய நிலையில் காட்சி அளிக்கும். இந்த ஆலயத்தில் சுகப்பிரசவமாக, திருமணத் தடை நீங்க, மாதவிடாய் போன்ற பிரச்னைகளுக்கு துர்க்கையம்மனிடம் வேண்டினால் அது நடக்கும் என்பது பக்தர்களின் ஐதீகமாக உள்ளது.
News April 2, 2025
அக்னி குண்டத்தில் நிலை தடுமாறி விழுந்த பக்தர்

சிவகங்கை மாவட்டம், பள்ளிபாளையம் ஆவரங்காடு அருகேஸ்ரீ மாரியம்மன் கோயிலில் தீ மிதித் திருவிழாநடைபெற்றது. 6 மாத பெண் குழந்தையுடன் தீ மிதிக்க வந்த பக்தர் அக்னி குண்டத்தில் நடந்து செல்லும்போது தடுமாறி குழந்தையுடன் கீழே விழுந்தார். தீமிதி திருவிழாவில் குழந்தையுடன் விழுந்த பக்தரால் பரபரப்பு ஏற்பட்டது.
News April 2, 2025
சிவகங்கையில் வேலைவாய்ப்பு

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தனியார் ரெடிமேட்ஸ் நிறுவனத்தில் 100க்கும் மேற்பட்ட விற்பனையாளர் காலிபணியிடங்கள் உள்ளது. 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18 வயது முதல் 40 வயது வரை உள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம். மாத ஊதியமாக 15 ஆயிரம் வழங்கப்படும் . அதேபோல இலவச உணவு மற்றும் தங்கும் இடம், ஊக்கத்தொகை, ESI , PF வசதிகளும் உள்ளது. <