News April 6, 2025

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு 22 ஆண்டு சிறை

image

கள்ளக்குறிச்சியை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி சையத் லியாகத் அலி (52). இவர் திருப்பத்துாரில் தங்கி, பணியாற்றி வந்தார். இவர் கடந்த, 2022 அக்., 7ல், 4 வயது சிறுமியை வீட்டிற்கு கடத்தி வந்து, பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அவரை, வாணியம்பாடி அனைத்து மகளிர் போலீசார், போக்சோவில் கைது செய்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மீனாகுமாரி, அவருக்கு 22 ஆண்டுகள் சிறை, 7,000 ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.

Similar News

News August 9, 2025

அனைத்து ஊராட்சியிலும் கிராம சபைக்கூட்டம் நடத்த உத்தரவு

image

திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டங்கள் சுதந்திர தினமான 15.08.2025 அன்று முற்பகல் 11.00 மணிக்கு தவறாமல் கூட்டப்பட வேண்டுமென அனைத்து கிராம ஊராட்சி தலைவர்கள் மற்றும் அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கும் மாவட்ட ஆட்சியர் க.சிவ சௌந்தரவல்லி உத்திரவு பிறப்பித்துள்ளார்.

News August 9, 2025

திருப்பத்தூர்: தேவையற்றை மெஸேஜ் வருகிறதா?

image

திருப்பத்தூர் மாவட்ட மக்களே உங்கள் செல்போனுக்கு மிகப் பெரிய பரிசுத் தொகை விழுந்துள்ளதாகவும், பொருட்கள் கிடைத்துள்ளதாகவும் வரும் செய்திகளை நம்பி ஏமாற்றம் அடைய வேண்டாம் என திருப்பத்தூர் மாவட்ட சைபர் கிரைம் காவலர்கள் சார்பில் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. அப்படி யாரேனும் உங்களை தொடர்பு கொண்டால் 1930 என்ற இந்த எண்ணிற்கோ அல்லது இந்த <>இணைதளம்<<>> வாயிலாகவோ புகார் தெரிவிக்கலாம். ஷேர் பண்ணுங்க.

News August 9, 2025

திருப்பத்தூர் மாவட்டத்தில் 95.60 மில்லிமீட்டர் மழை பொழிவு

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் நேற்று (ஆக.08) கனமழை பெய்த நிலையில், மாவட்டத்தில் அதிகபட்சமாக ஆம்பூரில் 24.20 மில்லி மீட்டர் மழையும், வாணியம்பாடி பகுதியில் 18மில்லி மீட்டர் மழை என மாவட்டத்தில் மொத்தம் 95.60மில்லி மீட்டர் அளவு மழை பெய்துள்ளது. மேலும் மழையால், இரண்டு வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவசௌந்தரவல்லி இன்று (ஆக.09) தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!