News April 24, 2024

சாலையின் தடுப்பில் மோதி கொத்தனார் பலி

image

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் தாலுக்கா சமத்துவபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி மகன் அருண்குமார் (26). கொத்தனார் வேலை பார்த்து வந்த இவர் நேற்று தனது பைக்கில் தினேஷ் என்பவருடன் காணியாளம்பட்டி சாலையில் அதிவேகமாக சென்றார். அப்போது கட்டுப்பாட்டை இழந்து சாலை தடுப்பில் மோதி சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்து தினேஷ் அளித்த புகாரின் பேரில் மாயனூர் போலீசார் நேற்று வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Similar News

News April 30, 2025

கரூர் அருகே அடுத்தடுத்த கொள்ளை முயற்சி

image

கரூர், ராமகிருஷ்ணபுரம் பகுதியைச் சேர்ந்தவர் முகேஷ்( 34). இவருக்கு சொந்தமான ஆவரங்காட்டு புதூரில் உள்ள பண்ணை வீட்டின் கதவை மர்மநபர்கள் உடைத்து திருட்டு முயற்சியில் ஈடுபட்டு உள்ளனர். மேலும் அதே பகுதியில் உள்ள ஜெயக்குமார் வீட்டின் கதவை உடைத்து திருட முயன்றுள்ளனர். இது குறித்த வேலாயுதம்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News April 29, 2025

குழந்தை வரம் தரும் நரசிம்மபுரீஸ்வரர் கோயில்!

image

கரூர் மாவட்டத்தில் உள்ள கருப்பத்தூரின் நரசிம்மபுரீஸ்வரர் கோயிலில் ஓர் சிறப்பு வழிபாடு உண்டு. இங்குள்ள மகாலட்சுமிக்கு பூசுமஞ்சளை பக்தர்கள் சாத்துவது வழக்கம். அந்த மஞ்சளை பெண்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும். அவர்கள் அதை அரைத்து குளித்தால் குழந்தை பாக்கியம் நிச்சயம் என்கிறார்கள் பக்தர்கள். பிரச்னை உள்ள நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

News April 29, 2025

கரூர் அரசு உதவித் திட்ட எண்கள்

image

▶️ உதவி திட்ட இயக்குநர்: 7373704218
▶️ செயற்பொறியாளர்: 7373704578
▶️ உதவித் திட்ட அலுவலர்(ஊதியம்&வேலைவாய்ப்பு) : 7402607682
▶️ உதவித் திட்ட அலுவலர்(வீடுகள்&சுகாதாரம்): 7402607681
▶️ உதவித் திட்ட அலுவலர்: 7402607679
▶️ கண்காணிப்பாளர்: 7402607688
▶️ வட்டார வளர்ச்சி அலுவலர்: 7402607715

error: Content is protected !!