News April 2, 2024
சட்டவிரோத ஸ்கேன் செண்டர்- ஒருவர் கைது

திருப்பத்தூர் அருகே பசுமை நகர் பகுதியில் வீட்டை வாடகைக்கு எடுத்து ஸ்கேன் செண்டர் நடத்தி அதில் கர்ப்பிணி பெண்களுக்கு சட்டவிரோதமாக கருவில் இருக்கும் குழந்தை ஆணா பெண்ணா என பரிசோதித்து வந்தது அம்பலமானது. அங்கு சென்ற போலீசார் ஸ்கேன் செண்டரில் பணியாற்றிய ஐயப்பனை கைது செய்து இடைத்தரகர் மற்றும் உரிமையாளரை வலை வீசி தேடி வருகின்றனர்.
Similar News
News April 19, 2025
திருப்பத்தூர்: வேலை தேடும் இளைஞர்கள் கவனத்திற்கு

வேலை தேடும் இளைஞர்களுக்கு முதல் சவாலே எங்கு வேலை உள்ளது என்பதை தெரிந்து கொள்வது தான். அத்தகையான இளைஞர்களுக்கு உதவிடும் வகையில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் மூலம் https://www.tnprivatejobs.tn.gov.in/ என்ற இணையதளம் செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் மாவட்ட வாரியாக தனியார் துறையில் உள்ள காலிப்பணியிடங்களை அறிந்து கொள்ள முடியும். வேலை தேடும் உங்க நண்பருக்கு ஷேர் பண்ணி ஹெல்ப் பண்ணுங்க.
News April 19, 2025
ஊராட்சி மன்ற தலைவர்கள் பச்சை திறமையில் கையெழுத்திட தடை

திருப்பத்தூர் மாவட்டம் அனைத்து கிராம ஊராட்சி மன்ற தலைவர்கள், ஊராட்சி மன்ற ஆவணங்கள் மற்றும் கடிதங்களில் பச்சை நிற மையை பயன்படுத்தி வருவதால் அது குறித்து உரிய அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. மேலும் அரசாணை நிலை எண்: 151, பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்த (எ) துறை, நாள்: 21.10.2010-ன் படி தேர்தெடுக்கப்பட்ட ஊராட்சி பிரதிநிதிகள் பச்சை நிற மையை பயன்படுத்துவதை தடை செய்து ஊராட்சி உதவி இயக்குனர் உத்தரவு
News April 19, 2025
திருப்பத்தூர் மாவட்டத்தில் குரூப் 4 மாதிரித் தேர்வு அறிவிப்பு

திருப்பத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் குரூப் 4 மாதிரி தேர்வுகள் இலவசமாக நடத்தப்பட உள்ளன. இத்தேர்வானது வருகின்ற 22 ஆம் தேதி ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடத்தப்பட உள்ளது. எனவே இத்தேர்விற்கு தயாராகிக் கொண்டிருக்கும் மாணவர்கள் இதில் கலந்து கொள்ளுமாறு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் கஸ்தூரி தெரிவித்துள்ளார்.