News August 18, 2024
சங்கரன்கோவில் கோயிலில் கும்பாபிஷேகத்திற்கு தடையில்லை

சங்கரன்கோவிலை சேர்ந்த சங்கர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், வரும் 23ம் தேதி சங்கரன்கோவில் கோயில் குடமுழுக்கு நடைபெறுகிறது. புனரமைப்பு பணிகளை செய்த பின்பே குடமுழுக்கு நடத்த வேண்டும் என குறிப்பிட்டிருந்தார். மனுவை விசாரித்த நீதிபதி, குடமுழுக்கு நடத்த தடையில்லை. நிபுணர் குழு & மனுதாரர் தரப்பில் 28ல் ஆய்வு செய்ய வேண்டும். விசாரணை செப்.2 ஒத்திவைக்கப்படுகிறது என்றார்.
Similar News
News August 5, 2025
தென்காசி மக்களே… மாதம் ரூ.3000 ஓய்வூதியம் பற்றித் தெரியுமா?

தென்காசி அமைப்புசாரா தொழிலாளர்களின் நலன் கருதி மத்திய அரசு கொண்டு வந்த சிறப்பான திட்டம் தான் இந்த “பிரதான் மந்திரி ஷ்ரம் யோகி மான்-தன்” (PM-SYM). இதில் சந்தாதாரர் 60 வயதுக்கு பிறகு மாதம் ரூ.3,000-யை குறைந்தபட்ச ஓய்வூதியமாகப் பெறுவதை உறுதி செய்கிறது. கட்டுமானத் தொழிலாளர்கள், விவசாயக்கூலிகள், ஓட்டுநர்கள் போன்ற பல அமைப்புசாரா தொழிலாளர்கள் <
News August 5, 2025
தென்காசி மாணவர்களுக்கு குட் நியூஸ்.. ஆகஸ்ட்.7-ல் விடுமுறை!

தென்காசி: சங்கரன்கோவில் சங்கரநாராயணசாமி திருக்கோவில் ஆடித்தபசு திருவிழா வரும் ஆகஸ்ட்.7ம் தேதி வியாழன் அன்று நடைபெற இருப்பதால், தென்காசி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லுாரி, மாநில அரசு அலுவலகங்களுக்கும், நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை ஈடுசெய்யும் விதமாக (23.08.2025) சனிக்கிழமை அன்று தென்காசி மாவட்டத்திற்கு வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
News August 4, 2025
தென்காசி மாவட்ட காவல் உதவி எண்கள்

தென்காசி மாவட்ட எஸ்பி அலுவலகம் இன்று (ஆக.4) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் விவரங்களை வெளியிட்டுள்ளது. அதில், தென்காசி மாவட்ட பகுதிகளில் போலீசாரின் அவசர உதவிகள் தேவைப்படும் போது பொதுமக்கள் தங்கள் பகுதியை சேர்ந்த அதிகாரிகளை தொடர்பு கொண்டு உரிய உதவிகளை பெற்று கொள்ளலாம் என அறிவித்துள்ளது.