News March 30, 2025
சங்கடம் தீர்க்கும் மொரட்டாண்டி சனீஸ்வரர்

புதுச்சேரி அருகே கழுவெளி சித்தர் தவம் செய்த இடமான மொரட்டாண்டி எனும் கிராமத்தில், உலக மக்களின் குறைகளை நிவர்த்தி செய்ய சித்தரின் கனவில் வந்து அமைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நவக்கிரக கோயிலில் 27 அடி உயரம் கொண்ட சனீஸ்வரன் சிலை உள்ளது. மேலும் அங்கு மற்ற நவக்கிரக சிலைகள் 15 அடி உயரம் இருக்கும். இங்குள்ள சனீஸ்வரரை வணங்கினால் வாழ்வின் துன்பங்களை நீங்கும் என்று கூறுகின்றனர். இதை பிறருக்கும் பகிரவும்
Similar News
News April 9, 2025
புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை

புதுச்சேரியில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த சீனியர் எஸ்.பி. நாரா சைதன்யா, போலியான கால் சென்டர்கள் கண்டறியப்பட்டு அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். போலி அப்ளிகேஷன் மூலம் மோசடி செய்யும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் தெரியாத நபர்களிடமிருந்து whatsapp, instagram, Facebook மூலம் ஏதேனும் அழைப்புகள் வந்தால் அதை முற்றிலும் நம்ப வேண்டாம் என்றார்.
News April 9, 2025
சிறுமி கர்ப்பம்: வாலிபர் போக்சோவில் கைது

புதுவை கிராமத்தை சேர்ந்த ராகுல், பெயிண்டர். இவர் இளம்பெண் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அப்பெண் கர்ப்பமடைந்து, பரிசோதனைக்காக புதுவை மருத்துவமனைக்கு சென்றபோது அப்பெண்ணிற்கு, 18 வயது பூர்த்தியாகவில்லை என்பது தெரியவந்தது. இதையடுத்து புதுச்சேரி குழந்தைகள் நல அதிகாரி அளித்த புகாரின் பேரில், திருக்கனுார் போலீசார் ராகுல் மீது போக்சோ பிரிவில் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
News April 9, 2025
பள்ளி அருகே புகையிலைப் பொருள் விற்ற பெண் கைது

புதுச்சேரி முத்தியால்பேட்டை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சோலை நகர் மெயின் ரோட்டில் உள்ள சின்னாத்தா அரசு பள்ளி அருகில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்ற காயத்ரி என்பவரை முத்தியால்பேட்டை போலீசார் நேற்று கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து ரூ.1000 மதிப்புள்ள புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்தனர்.