News March 25, 2025
கோவையில் பாலியல் தொழில்: 3 பேர் கைது!

கோவை சரவணம்பட்டி உள்ள ஒரு பியூட்டி பார்லரில், அழகிகளை வைத்து பாலியல் தொழில் நடப்பதாக, சரவணம்பட்டி காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பெயரில் தகவல் கிடைத்த இடத்தில், காவல்துறையினர் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அங்கு பாலியல் தொழிலில் ஈடுபட்ட சபீபுல்லா (53), சங்கீதா ஷர்மா (25), சோனா (29) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Similar News
News March 29, 2025
பவானி ஆற்று நீர் மஞ்சள் நிறத்தில் தோற்றம்

கோயம்புத்தூர் மாவட்டம் சிறுமுகை அருகே பவானி ஆற்று நீர் இன்று (29-03-2025) மஞ்சள் நிறத்தில் தோற்றம் அளித்ததை கண்டு அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இப்பகுதி மக்களுக்கு இந்த தண்ணீரே குடிதண்ணீருக்காக பயன்படுத்தி வருகின்றனர். குடிநீர் வாரியத்திற்கு தகவல் அளிக்கப்பட்டு விரைந்து வந்த அதிகாரிகள் தண்ணீரை பரிசோதனைக்கு எடுத்துச் சென்று ஆய்வு நடத்தினர்.
News March 29, 2025
25 ரவுடிகள் மாநகரை விட்டு வெளியேற உத்தரவு: கமிஷனர்

கோவை மாநகரில் சமூக விரோத செயல்களில் ஈடுபடும் ரவுடிகளை வெளியேற்ற 25 பேர் கொண்ட பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது. இதுவரை 110 ரவுடிகள் வெளியேற்றப்பட்டுள்ளனர். மீறி வருபவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகின்றனர். உத்தரவை மீறி உயர் நீதிமன்றத்தில் 2 தாக்கல் செய்த மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். அடுத்த கட்டமாக மேலும் 25 பேர் கண்டறியப்பட்டு மாநகரை விட்டு வெளியேற்ற உத்தரவு.
News March 29, 2025
கேன் வாட்டர் குடிப்பவர்கள் கவனத்திற்கு

கோடை காலம் முன்னரே கோவை மாவட்டத்தில் குடிநீர் கேன்கள் விற்பனை அதிகரிக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில் குடிநீர் கேன்களை அதிகமுறை பயன்படுத்தும் போது அதில் உள்ள மைக்ரோ பிளாஸ்டிக் தண்ணீரில் கலந்துவிடும் அபாயம் உள்ளது. எனவே, ஒரு குடிநீர் கேனில் 30 முறை மட்டுமே மறுசுழற்சி செய்து குடிநீரை நிரப்பவேண்டும் என மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். (Share பண்ணுங்க)