News March 16, 2025

கோவையில் 24 மணி நேரமும் கண்காணிப்பு!

image

கோவையில் சாலை விதி மீறல்கள், விபத்துகளை தடுக்கும் வகையில் 24 மணி நேரமும் காவல்துறை கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளது. அதன்படி, கோவை மாநகரில், இரவு நேரங்களில், ஒன்வே மற்றும், அதிவேகமாக வாகனங்களில் வருபவர்கள், கண்காணிக்கப்பட்டு, அவர்களது வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு வழக்கு பதியப்படும். மேலும் விபத்தை ஏற்படுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரித்துள்ளது.

Similar News

News March 16, 2025

கருவலூர் மாரியம்மன் கோயில்!

image

கோவை அன்னூரை அடுத்த கருவலூரில், மாரியம்மன் வீற்றிருக்கிறாள். பண்ணாரி அம்மனுக்கு அடுத்தபடியாக, கொங்கு மண்டலத்தில் புகழ்பெற்ற தெய்வமாக கருவலூர் மாரியம்மன் உள்ளார். சக்திவாய்ந்த இந்த அம்மனை வணங்கினால், அம்மை, கண் நோய்கள் குணமாகுமாம். இக்கோயில் குளத்தில் வரும் நீர், கண் நோய்களை குணப்படுத்துமாம். அம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்கள், நோய் சரியான பின்பு, இங்கு வந்து அம்மனை வணங்கி செல்கின்றனர்.

News March 16, 2025

உணவுப்பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தல்

image

கோவை மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் தமிழ்ச்செல்வன்  கூறுகையில், வடை, உள்ளிட்ட திண்பண்டங்களை வாங்கி உண்ணும் போது, அதில் உள்ள எண்ணெயை காட்டிலும், தாளில் உள்ள மையால் பாதிப்பு அதிகம். விற்பனையாளர்கள் பிளேட், வாழை, தேக்கு இலைகளை பயன்படுத்தவும், பார்சல் கட்ட தாளின் மேல் இலை வைத்து கொடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. உணவும், தாளும் நேரடி தொடர்பில் இருக்க கூடாது என்றார்.

News March 16, 2025

கோவையில் ஒரு சில பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு

image

கோவை வானிலை துறை அதிகாரிகள் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவையில் மார்ச் 18ம் தேதி முதல் 21ம் தேதி வரை, கோவையின் ஒரு சில பகுதிகளில், லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், இந்த நாட்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படலாம் என்றும், வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மார்ச் 19, 20, 21 ஆகிய தேதிகளில், வெப்பம் அதிகபட்சம் 35 டிகிரி வரை பதிவாக வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!