News March 26, 2025
கோர விபத்தில் கவிழந்த ஆட்டோ

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் பகுதியைச் சேர்ந்தவர்கள் மூங்கிலான் (30), ரேவதி(27) தம்பதி. இவர்களது ஒரு வயது மகள் தன்விகா. மூங்கிலான் திண்டிவனத்திலிருந்து ஆட்டோவில் சாரம் அருகே சென்ற போது, பின்னால் வந்த கார் ஆட்டோ மீது வேகமாக மோதியது. இதில் ஆட்டோ தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. ஆட்டோவில் வந்த குழந்தை உட்பட 3 பேரும் படுகாயமடைந்தனர். ஒலக்கூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
Similar News
News March 31, 2025
தீராத குடும்ப பிரச்சனைகள் தீர்க்கும் கோவில்

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் பிரசித்தி பெற்ற அங்காளம்மன் திருக்கோயில் உள்ளது. இங்கு வந்து வழிபட்டால், கணவன் மனைவி பிரச்சனை நீங்கும், குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது. நீங்களும் இங்கு சென்று வாருங்கள். ஷேர் பண்ணுங்க.
News March 31, 2025
விழுப்புரம் சுங்கச் சாவடிகளில் கட்டண உயர்வு

தமிழ்நாட்டில் 40 சுங்கச்சாவடிகளில் இரவு முதல் கட்டண உயர்வு ஐந்து முதல் பத்து சதவீதம் வரை சொந்த கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டி சுங்கச்சாவடி மற்றும் நங்கிளிகொண்டான் சுங்கச்சாவடி மற்றும் பல சுங்கச்சாவடிகள் அடங்கும் என்பதனை தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தொழில் செய்யும் வியாபாரிகள் கவலை அடைந்துள்ளனர்.
News March 31, 2025
பாதுகாப்பு படையில் வேலை: விளையாட்டு வீரர்களுக்கு வாய்ப்பு

இந்தோ – திபெத் எல்லை பாதுகாப்பு படையில் காலியாக உள்ள 133 காவலர் பணியிடங்களுக்கு வரும் ஏப்ரல் 2ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். ரூ.21,700 – 69,100 வரை சம்பளம் வழங்கப்படும். 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தேசிய, மாநில, பல்கலை., அளவிலான போட்டிகளில் 3ஆவது இடமாவது வெற்றி பெற்றிருக்க வேண்டும். விளையாட்டு திறன், உடற்தகுதி, மருத்துவ தகுதி அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். <