News September 10, 2024

கொள்ளிடம் ஆற்றில் அழுகிய நிலையில் பெண் சடலம் மீட்பு

image

வாத்தலை அடுத்த கொள்ளிடம் ஆற்றில் 40 வயது மதிக்கத்தக்க அழுகிய நிலையில் பெண் சடலம் கிடப்பதாக வாத்தலை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன் பெயரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அடையாளம் தெரியாத பெண் சடலத்தை மீட்டு ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் வாத்தலை போலீசார் வழக்கு பதிவு செய்து, இறந்த பெண் யார் என்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News

News April 27, 2025

திருச்சியில் SBI வங்கியில் வேலை

image

திருச்சியில் இயங்கி வரும் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI) வங்கியில் GENERAL MANAGER பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் திறன் பயிற்சி துறை அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு ரூ.15,000-ரூ.25,000 வரை ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு பட்டப்படிப்பு முடித்தவர்கள்<> இங்கே க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் நபர்களுக்கு SHARE செய்து உதவுங்கள்…

News April 27, 2025

மலைக்கோட்டை சித்திரை தேர் திருவிழா 

image

திருச்சி, மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோயில் சித்திரை தேர் திருவிழா ஏப்.30ஆம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்க உள்ளது. தொடர்ந்து மே.1ஆம் தேதி கொடியேற்றம் நடைபெற உள்ளது. அதனைத் தொடர்ந்து நாள்தோறும் பல்வேறு வாகனங்களில் சுவாமி அம்பாள் வீதி உலா நடைபெறும். விழாவின் முக்கிய நிகழ்வான சித்திரை தேரோட்டம் மே.9ஆம் தேதி நடைபெற உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. பக்தர்களுக்கு ஷேர் பண்ணுங்க..

News April 27, 2025

ஆற்றில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு

image

துறையூர் அருகே பெருமாள்பாளையத்தைச் சேர்ந்த பாலகுமார் மகன் தர்ஷன் (13). நேற்று பெற்றோருடன் ஸ்ரீரங்கம் தேரோட்டத்தில் கலந்துகொண்டு ஊர் திரும்பியபோது, நொச்சியம் கொள்ளிடம் ஆற்றில் குளிக்க தர்ஷன் இறங்கியுள்ளார். அப்போது மூழ்கத் தொடங்கிய அவரை மீட்டு ஸ்ரீரங்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் தர்ஷன் ஏற்கெனவே இறந்துவிட்டதாக கூறினர்.

error: Content is protected !!