News April 17, 2024

கொலை குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பு

image

வைத்தீஸ்வரன் கோவில் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட மருவத்தூர் பகுதியில் கடந்த 2020 ஆம் ஆண்டு வாய் தகராறு காரணமாக சுகதேவ்(29) என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கு மயிலாடுதுறை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. கொலை குற்றத்தில் ஈடுபட்ட செல்வம் அரவிந்த் பாலகுரு சிவசாமி சிவகுரு ஆகிய ஐவருக்கு ஆயுள் தண்டனையும் தலா ரூ. 2000 அபராதம் விதித்து மாவட்ட அமர்வு நீதிபதி நேற்று தீர்ப்பு வழங்கியுள்ளார்

Similar News

News April 18, 2025

நாளை இலவச முழு உடல் மருத்துவ பரிசோதனை முகாம்

image

மயிலாடுதுறை ரோட்டரி சங்கம் தர்மபுரம் கலைக்கல்லூரி தனலட்சுமி சீனிவாசன் மருத்துவமனை சார்பில் தருமபுரம் ஆதீனம் மணிவிழாவை முன்னிட்டு நாளை சனிக்கிழமை தருமபுரம் ஆதீனம் கலைக்கல்லூரியில் காலை 8:30 மணி முதல் 2:00 மணி வரை இலவச முழு உடல் மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெற உள்ளது. முகாமில் ரூ.5000 மதிப்புள்ள இசிஜி எக்கோ ஸ்கேன் பரிசோதனை முற்றிலும் இலவசமாக செய்யப்படவுள்ளது. பொதுமக்கள் பங்கேற்று பயன பெறலாம்.

News April 18, 2025

விளையாட்டு பயிற்சி முகாம் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

மயிலாடுதுறை ராஜன் தோட்டம், சாய் விளையாட்டரங்கில் மாவட்ட அளவிலான கோடைக்கால விளையாட்டு பயிற்சி முகாம் ஏப்.25 முதல் மே 15 வரை நடைபெறவுள்ளது என மாவட்டஆட்சியர் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார். மாவட்ட அளவிலான இருப்பிடமில்லா கோடைக்கால பயிற்சி முகாம் 18 வயதிற்குள்பட்ட பள்ளி மாணவர்கள், மாணவியர்கள் மற்றும் மாணவர்ருக்கு மயிலாடுதுறை ராஜன்தோட்டம் சாய் விளையாட்டரங்கில் ஏப்.25 முதல் மே 15 வரை நடைபெறவுள்ளது என்றார்.

News April 18, 2025

மயிலாடுதுறை:ரயில்வே துறையில் வேலைவாய்ப்பு?

image

இந்திய ரயில்வே பணியாளர் தேர்வு வாரியம் (RRBs) சார்பில் தெற்கு ரயில்வேயில் காலியாக உள்ள 510 உதவி லோகோ பைலட் (ALP) பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. டிப்ளமோ, பி.ஈ/பி.டெக் முடித்த 18 முதல் 30 வயதுக்குட்பட்ட நபர்கள் rrbchennai.gov.in என்ற இணையதளம் வாயிலாக இதற்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 11.05.2025. மத்திய அரசு வேலை தேடும் நபர்களுக்கு இதை ஷேர் செய்யவும்.

error: Content is protected !!