News April 14, 2024
கையாடல் செய்த வங்கி மேலாளர் சிறையிலடைப்பு

சாத்தரசன்கோட்டையைச் சேர்ந்த கலைச்செல்வி கடந்த மார்ச்மாதம் அவரது கணவரின் ஆயுள்காப்பீட்டுத் தொகை ரூ.1,00,000 EASF Small Finance வங்கி கணக்கில் இருந்து திருடப்பட்டதாக புகார் கொடுத்திருந்தார். இதுகுறித்த போலீசார் விசாரணையில் மானாமதுரையில் உள்ள EASF Small Finance வங்கியின் கிளை மேலாளர் முத்துகுமாருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்ததன் அடிப்படையில் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Similar News
News April 18, 2025
பரியாமருதுபட்டி நந்தீஸ்வரர் வரலாறு தெரியுமா?

சிவகங்கை மாவட்டம் நெற்குப்பை என்னும் சிற்றூரின் அருகிலுள்ளது பரியாமருதுபட்டி நந்தீஸ்வர கோயில். இந்த ஆலயம், 1829-ம் வருடம் நகரத்தாரால் கட்டப்பட்டது. மகாபாரதப் போரில் காயமடைந்த பாண்டவர்கள், இந்தத் தலத்தின் மண்ணை அள்ளி காயங்களின் மேல் பூச, உடனே ஆறியதாக குறிப்புகள் உண்டு. இங்குள்ள நெய் நந்தீஸ்வரரிடம் வேண்டிக்கொண்டு, நெய் வாங்கி அபிஷேகம் செய்தால் எண்ணியது நிறைவேறும் என்பது நம்பிக்கை. Share It.
News April 18, 2025
கோடைகால பயிற்சி முகாமில் பங்கேற்க விண்ணப்பிக்கலாம்

சிவகங்கை மாவட்டத்தில் உறைவிடம் சாரா கோடைக்கால பயிற்சி முகாம் 21 நாட்கள் நடத்தப்படவுள்ளது. அதில் தடகளம், கூடைப்பந்து, ஹாக்கி, கபடி, கால்பந்து ஆகிய விளையாட்டுப் போட்டிகள் வரும் 25.04.2025 முதல் 15.05.2025 வரை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடத்தப்படவுள்ளது. மேலும் விபரங்களுக்கு 7401703503 மற்றும் அலுவலக எண் 04575 299293 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
News April 18, 2025
சிவகங்கை: ரூ.15 ஆயிரம் சம்பளத்தில் வேலைவாய்ப்பு

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் மின் தொழில் நுட்ப வல்லுனர் (Electrical Technician) காலி பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஊதியம் ரூபாய் 15,000 வரை வழங்கப்படுகிறது. 12-ஆம் வகுப்பு படித்திருந்தால் போதுமானது. முன் அனுபவம் தேவையில்லை. விண்ணப்பிக்க இங்கே <