News April 23, 2025

கேரளாவில் நடைபெற்ற கூட்டத்தில் இராமநாதபுரம் எம்பி

image

வெளியுறவுத்துறை நாடாளுமன்ற நிலைக்குழு சுற்றுப் பயணத்தின் ஒரு பகுதியாக கேரளா மாநிலத்தில் நிலைக்குழு கூட்டம் நடைபெற்றது. அப்போது கொச்சி மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் RPO மற்றும் பாஸ்போர்ட் சேவை மையம் PSK உள்ளிட்டவைகளை நாடாளுமன்ற நிலைக்குழு உறுப்பினர்கள் பார்வையிட்டனர். இதில், இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற நிலைக்குழு உறுப்பினர் நவாஸ்கனி கலந்து கொண்டார்.

Similar News

News April 25, 2025

தவறாக நடக்க முயன்றதால் ஆத்திரத்தில் கொலை

image

ராமேஸ்வரத்தை சேர்ந்த நம்புராஜன் என்பவர் ஒரு மாதத்திற்கு முன்பு மாயமான நிலையில் அவரது அக்காள் ராணி போலீசில் புகார் அளித்தார். இதில் போலீசார் நடத்திய விசாரணையில் 1 மாதத்திற்கு முன்பு நம்புராஜன் அவருடைய நண்பருடன் மது அருந்திய போது மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் நம்புராஜன் தவறாக நடக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அவரது நண்பர் நம்புராஜனை கொலை செய்து உடலை புதைத்தது தெரியவந்துள்ளது.

News April 25, 2025

பாஜக மெழுகுவர்த்தி ஏந்தி மவுன அஞ்சலி

image

பஹல்காமில் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தோர் ஆன்மா அமைதி பெற பாஜக சார்பில் ராமநாதபுரத்தில் நேற்றிரவு மெழுகுவர்த்தி ஏந்தி மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. நகர் தலைவர் நாகராஜன் தலைமை வகித்தார். மத்திய கயிறு வாரிய முன்னாள் தலைவர் குப்புராமு, மத்திய தென்னை வாரியத்தலைவர் நாகராஜன், கவுன்சிலர் குமார், சிறுபான்மை பிரிவு மாநில செயலர் தலைவர் அஜ்மல்கான், ஊடகப் பிரிவு மாவட்ட தலைவர் குமரன் உள்பட பலர் பங்கேற்றனர்.

News April 25, 2025

இராமநாதபுரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வேண்டுகோள்

image

தமிழ்நாட்டில் பள்ளிகளில் ஆண்டு இறுதித் தேர்வு முடிவடைந்தது. கோடை விடுமுறை தொடங்கியுள்ளதால் பள்ளிகளில் உள்ள ஸ்மார்ட் கிளாஸ், ஹைடெக் லேப் மற்றும் பள்ளியில் உள்ள தளவாடப் பொருட்களுக்கு காவல்துறை மூலம் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றி இராமநாதபுரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சின்னராசு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

error: Content is protected !!