News April 3, 2025

கேந்திரிய வித்யாலயா பள்ளி பேரில் போலி இணையதளம்

image

சென்னையில், 14 கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் உள்ளன. அவை, மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் இயங்குகின்றன. இப்பள்ளியின் இணையதளம் பேரில், போலி இணையதளங்கள் செயல்படுகின்றன. அவற்றில் வெளியாகும் அறிவிப்புகளை நம்ப வேண்டாம் எனவும், கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் குறித்த தகவல்கள் அனைத்தும் <>kvsangathan.nic.in<<>> என்ற இணையதளம் வாயிலாக மட்டுமே பகிரப்படும் என்றும் கல்விப் பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.

Similar News

News April 7, 2025

சென்னை எம்.டி.சியில் வேலை வாய்ப்பு

image

சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் (MTC) சார்பில் இளம் பட்டதாரிகள், ஐடிஐ, டிப்ளமோ முடித்தவர்களுக்கு அரசு விதிகளை பின்பற்றி தொழில் பழகுநர் பயிற்சி அளிக்கப்படுகிறது. என்ஜினியரிங், டிப்ளமோ, கலை மற்றும் அறிவியல் பாடப்பிரிவில் 2021 – 24ஆம் ஆண்டில் டிகிரி முடித்தவர்கள் மட்டுமே இதற்கு விண்ணப்பிக்க முடியும். <>https://nats.education.gov.in<<>> என்ற இணையத்தளத்தில் விண்ணப்பிக்கலாம். ஷேர் செய்யுங்கள்

News April 7, 2025

அங்கன்வாடி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்

image

சென்னை மாவட்டத்தில் உள்ள குழந்தைகள் மையங்களில் காலியாக உள்ள 184 அங்கன்வாடி பணியிடங்கள், 22 குறு அங்கன்வாடி பணியிடங்கள், 102 அங்கன்வாடி உதவியாளர் பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நியமனம் செய்யப்பட உள்ளன. பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம். தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். 25-35 வயதுடைய 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பெண்கள் விண்ணப்பம் செய்யலாம். 23ஆம் தேதிக்குள் <>விண்ணப்பிக்கலாம்<<>>. ஷேர் பண்ணுங்க

News April 7, 2025

தம்பி கண் எதிரேயே அக்கா தூக்கிட்டு தற்கொலை

image

பொழிச்சலூர் எம்.ஜி.ஆர்.நகர் மூர்த்தி தெருவைச் சேர்ந்த ரோஷினி (10), 5ஆம் வகுப்பு படித்து வந்தார். இவரது தாய் கவுசல்யா நேற்று (ஏப்ரல் 6) வேலைக்கு சென்றுவிட்டு வருவதற்குள் வீட்டு வேலைகளை செய்து வைக்கும்படி ரோஷினியிடம் கூறியுள்ளார். ஆனால் ரோஷினி, வீட்டு வேலைகள் எதுவும் செய்யவில்லை. இதனால் தனது தாய் தன்னை அடிப்பாரோ? என பயந்த ரோஷினி தனது தம்பி கண் எதிரேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

error: Content is protected !!