News April 5, 2025

குழந்தை வரம் தரும் அங்காளம்மன்

image

உளுந்தூர்பேட்டை சித்தலூர் கிராமத்தில் அமைந்துள்ளது அங்காளம்மன் கோயில். தென்பெண்ணை ஆற்றின் கரையில் உள்ள இந்த கோயிலின் மூலவராக உள்ள பெரிய அங்காளம்மன் ‘பெரியாயி’ என்று அழைக்கப்படுகிறார்.இங்கு வந்து வழிபட்டால் குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு குழந்தை வரம் கிட்டும் என்பது நம்பிக்கை. இதனாலேயே திரளான பக்தர்கள் இங்கு வந்து வழிபட்டு செல்கின்றனர். ஷேர் பண்ணுங்க….

Similar News

News April 8, 2025

சோழன் பிறந்த திருக்கோவிலூர்

image

சோழ தேச பெருமையை நிலைநாட்டிய ராஜ ராஜா சோழனை பெற்ற பெருமை கொண்டது கள்ளக்குறிச்சி மாவட்டம். திருக்கோவிலூர் தான் சோழனின் தாயார் வானவன் மாதேவி பிறந்த ஊர். வானவன் மாதேவிக்கும் சுந்தர சோழனுக்கும் திருமணம் நடந்தது பற்றியும்,ராஜ ராஜ சோழன் இங்கு பிறந்தது பற்றியும் திருக்கோவிலூர் வீரட்டானேசுஸ்வரர் கோவில் கல்வெட்டு கூறுகிறது. சோழத்திற்கு பெருமை சேர்க்கும் நம்ம ஊரு பெருமையை மற்றவர்களுக்கும் பகிருங்கள்

News April 8, 2025

ரூ.1 லட்சம் வரை சம்பளம்; எப்படி விண்ணப்பிப்பது?

image

தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் (TIDCO)மூலம் மேனேஜர், நிறுவன செயலாளர் உள்ளிட்ட பதவிகள் நிரப்பப்படுகிறது. இதற்கு தகுதியும், ஆர்வமுள்ளவர்கள் வரும் 24ஆம் தேதிக்குள் <>இந்த லிங்கை <<>>கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம். கல்வி தகுதி: மேனேஜர் பதவிக்கு CA/CMA /MBA.செயலாளர்- பட்டப்படிப்புடன் ACS முடித்திருக்க வேண்டும். வயது வரம்பு- 45 வயது வரை. தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்படும்.

News April 8, 2025

தொழில் கடன் பெற விண்ணப்பிக்கலாம்

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டம் மூலம் முன்னாள் படை வீரர்கள் மற்றும் சார்ந்தோர்கள் தொழில் துவங்க கடனுதவி வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் வழங்கப்படும் கடன் தொகையில் 30 சதவீதம் மூலதன மானியம், 3 சதவீதம் வட்டி மானியம் வழங்கப்படும். தொழில் துவங்க விரும்புவோர் www.exwel.tn.gov.in என்கிற இணையதள முகவரியில் விண்ணப்பித்து பயன் பெறலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!