News April 9, 2025

குளச்சல்: ரூ.25 ஆயிரத்துடன் மனைவி மாயம்

image

குளச்சல் அருகே சாஸ்தான்கரை பகுதியில் வசித்து வருபவர் அபினேஷ் (34). இவர் பள்ளிமுக்கு சந்திப்பில் சலூன் கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி மகாலட்சுமி (25). இந்த தம்பதிக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். கணவர் பிள்ளைகளுடன் வசித்து வந்த மகாலட்சுமி கடந்த மாதம் 25ஆம் தேதி திடீரென மாயமானார்.ரூ.25,000ஐ அவர் எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது.இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Similar News

News April 19, 2025

குமரி மாவட்டத்திற்கு 255.05 டன் கைத்தறி நூல் கொள்முதல்

image

கன்னியாகுமரி மாவட்ட நெசவாளர்களுக்காக கைத்தறி நூல் மத்திய அரசின் தேசிய கைத்தறி வளர்ச்சி கழகம் மூலம் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. கடந்த நிதியாண்டில் மட்டும் தேசிய கைத்தறி வளர்ச்சி கழகம் மூலம் 255.05 டன் கைத்தறி நூல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு கொள்முதல் செய்யப்படும் நூலுக்கு மத்திய அரசு 15 சதவீதம் வரை மானியமாக வழங்குகிறது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

News April 19, 2025

சப் இன்ஸ்பெக்டர் தேர்வுக்கான பயிற்சி வகுப்பு ஆட்சியர் தகவல்

image

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அழகுமீனா நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில்; சப் இன்ஸ்பெக்டர் தேர்வுக்கான பயிற்சி வகுப்பு நாகர்கோவில் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் இம்மாதம் 23ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது. இதில் சேர விரும்பும் மாணவர்கள் இணையதளத்தில் <>லிங்க்<<>> விண்ணப்பிக்கலாம். முதலில் வரும் 100 மாணவர்கள் மட்டுமே இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள முடியும் என்று கூறியுள்ளார். *ஷேர் பண்ணுங்க

News April 19, 2025

நாகர்கோவில் தண்டவாளத்தில் ஆண் சடலம் மீட்பு 

image

நாகர்கோவில் நெல்லை ரயில் பாதையில் மறுகால் குறிச்சி தண்டவாளப்பகுதியில் சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் காயங்களுடன் கண்டறியப்பட்டுள்ளது, தகவல் அறிந்த நாகர்கோவில் ரயில்வே போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் நேற்று வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!