News March 20, 2025

குறி சொல்பவர் வெட்டிக் கொலை

image

மடப்புரம் கோவில் செல்லும் வழியில் சந்தனகோடாங்கி(45) கோடாங்கி அடித்து குறி செல்லி வந்துள்ளார். நேற்று மாலை இவரை தினேஷ்குமார்(27) என்பவர் வெட்டி விட்டு தப்பிச்சென்றார். திருப்புவனம் போலீசார் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் கோடாங்கி உயிரிழந்தார். போலீசார் தினேஷ்குமாரை கைது செய்த நிலையில், இவரது உறவுக்கார பெண்ணுடன் சந்தனகோடாங்கி தொடர்பில் இருந்ததாக கூறப்படுகிறது.

Similar News

News April 30, 2025

57 பேர் குண்டாஸ் சட்டத்தில் சிறையில் அடைப்பு

image

சிவகங்கை மாவட்ட காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்ட மற்றும் திருட்டு வழக்குகளில் ஈடுபட்டதாக ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை நான்கு மாதங்களில் சுமார் 57 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.

News April 29, 2025

கொம்பன் காளையை கண்டுபிடித்தால் ரூ.30 ஆயிரம்

image

கண்டரமாணிக்கத்தில் கடந்த ஏப்ரல் 24ஆம் தேதி மாபெரும் மஞ்சுவிரட்டு நடைபெற்றது. இந்த மஞ்சுவிரட்டில் அவிழ்த்துவிட்ட கொம்பன் காளை கே.வலையப்பட்டியில் பிடி கயிறுடன் சென்ற நிலையில் காளையை காணவில்லை, கொம்பன் என்று கூப்பிட்டால் ஓடிவரும் காளையை கண்டு பிடித்து கொடுத்தால் ரூ.30 ஆயிரம் வழங்கப்படும் என காளையின் உரிமையாளர் தெரிவித்துள்ளார். 9326506153, 7094924233, 8939258484 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

News April 29, 2025

கிராம சபை கூட்டம் மாவட்ட ஆட்சியர் தகவல்

image

தொழிலாளர் தினம் (01.05.2025) அன்று அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கிராம சபைக் கூட்டத்தினை, ஊராட்சியின் எல்லைக்கு உட்பட்ட வார்டுகளில் சுழற்சி முறையை பின்பற்றி காலை 11.00 மணியளவில் கிராம சபைக் கூட்டம் நடத்தப்பட வேண்டும். எனவே, கிராம சபைக் கூட்டத்தில் பொதுமக்கள் தவறாது கலந்து கொள்ள வேண்டும் என்று மாவட்ட  ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!