News March 16, 2025
குமரி மாவட்டத்தில் 2வது கட்ட பறவைகள் கணக்கெடுப்பு பணி

குமரி மாவட்டத்தில் நீர்வாழ் பறவைகள் மற்றும் வனப்பகுதியில் உள்ள பறவைகள் குறித்த கணக்கெடுப்பு பணிமேற்கொள்ளப்பட்டது. கடந்த 9ஆம் தேதி நீர்வாழ் பறவைகள் குறித்த கணக்கெடுப்பு நடைபெற்றது. இந்த நிலையில் இன்று வனப்பகுதியில் கணக்கெடுப்பு பணி நடைபெற்று வருகிறது. உத்திர பாஞ்சான், தெற்கு மலை உதயகிரி கோட்டை மருந்து வாழ் மலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கணக்கெடுப்பு பணி நடைபெற்று வருகிறது.
Similar News
News March 17, 2025
குமரி: உணவு, தங்கும் இடத்துடன் பயிற்சி வகுப்பு!

ஆதிதிராவிடர், பழங்குடியினர் & பிற சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு அகில இந்திய நுழைவுத் தேர்வில்(JEE Mains) தேர்ச்சி பெற பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளது. இப்பயிற்சி மாணவர்களுக்கு மட்டும் வழங்கப்பட உள்ளது. உணவு, தங்குமிடம் & பயிற்சிக்கான 11 மாத செலவை CPCL நிறுவனம் ஏற்றுக்கொள்ளும். www.tahdco.com தளத்தில் பதிவு செய்து பயிற்சியில் பங்கேற்கலாம் என ஆட்சியர் அலுவலகம் அறிவுறுத்தியுள்ளது. SHARE IT.
News March 17, 2025
அரசுப் பள்ளிக்கு நிதி உதவி: குமரி கலெக்டர் அறிவுறுத்தல்

குமரி மாவட்ட ஆட்சியர் அழகு மீனா நேற்று(மார்ச் 16) வெளியிட்ட செய்தி குறிப்பின்படி, குமரியில் அரசு பள்ளிகளின் மேம்பாடு மற்றும் பின்தங்கிய மாணவர்களின் கல்விக்கு உதவிடும் வகையில் ‘நம்ம ஊரு நம்ம ஸ்கூல்’ குழுவை தொடர்பு கொள்ளலாம். இந்த உதவி இணையதளம் வாயிலாக மட்டுமே அளிக்கப்பட வேண்டும். இதற்காக ஒவ்வொரு பள்ளிக்கும் வங்கி கணக்கு தொடங்கப்பட்டுள்ளது என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.
News March 17, 2025
குமரியில் 1 மணி வரை மழை பெய்ய வாய்ப்பு!

தமிழகத்தில், வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக வரும் 22ஆம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென் தமிழகத்தில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்த நிலையில் கன்னியாகுமரியில் இன்று(மார்ச் 17) மதியம் 1 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. SHARE IT.