News August 17, 2024

குமரி மாவட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று காலை 6:00 மணி நிலவரப்படி, கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சிற்றாறு ஒன்று அணைப்பகுதியில் 35.2 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. மேலும்,  சுருளோட்டில் 23.2 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. தொடர்ந்து, மழையினால் பேச்சுப்பாறை அணைக்கு 723 கன அடி தண்ணீரும், பெருஞ்சாணி அணைக்கு 501 கன அடி தண்ணீரும் வந்து கொண்டிருக்கிறது.

Similar News

News August 5, 2025

கன்னியாகுமரி மக்களே… மாதம் ரூ.3000 ஓய்வூதியம் தெரியுமா?

image

குமரி அமைப்புசாரா தொழிலாளர்களின் நலன் கருதி மத்திய அரசு கொண்டு வந்த சிறப்பான திட்டம் தான் இந்த “பிரதான் மந்திரி ஷ்ரம் யோகி மான்-தன்” (PM-SYM). இதில் சந்தாதாரர் 60 வயதுக்கு பிறகு மாதம் ரூ.3,000-யை குறைந்தபட்ச ஓய்வூதியமாகப் பெறுவதை உறுதி செய்கிறது. கட்டுமானத் தொழிலாளர்கள், விவசாயக்கூலிகள், ஓட்டுநர்கள் போன்ற பல அமைப்புசாரா தொழிலாளர்கள் <>இதில் பயன்பெறலாம்<<>>. இத்தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க..

News August 5, 2025

குமரி அணைகளில் இன்றைய நீர்மட்டம் விபரம்

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் பாசனத்திற்கு பயன்படும் அணைகளின் இன்றைய (ஆகஸ்ட். 5) நீர்மட்ட விவரம்: பேச்சிப்பாறை அணை 41.43 அடி (மொத்தம் 48 அடி), பெருஞ்சாணி அணை – 68.12 அடி (77 அடி), சிற்றாறு 1 அணை – 10. 76 அடி (18 அடி), சிற்றாறு 2 அணை – 10.85 அடி (18 அடி) நீர் உள்ளது. பேச்சிப்பாறைக்கு 360 கன அடி, பெருஞ்சாணிக்கு 143 கன அடி நீர்வரத்தும் உள்ளது.

News August 5, 2025

குமரியில் மதபோதகர் போக்சோவில் கைது!

image

கன்னியாகுமரி: தக்கலைப் பகுதில் உள்ள கிறிஸ்தவ ஆலயத்தில் மூலச்சல் பகுதியைச் சார்ந்த வர்கீஸ்(55) என்பவர் மத போதகராக இருந்து வருகிறார். இவர் கிறிஸ்தவசபையில் வேதாகம வகுப்பிற்கு வந்த 16 வயது சிறுவனிடம் பாலியல் சீண்டலில் ஈடுப்பட்டுள்ளார். இதுபற்றி சிறுவனின் பெற்றோர் அளித்த புகாரின்போரில், தக்கலை போலீசார் மதபோதகரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.

error: Content is protected !!