News April 10, 2025

குமரி கடலில் பேரலைகள் எழுவதற்கு வாய்ப்பு – எச்சரிக்கை

image

கன்னியாகுமரி மாவட்ட கடல் பகுதியில் ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரை இன்று பேரலைகள் எழுவதற்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய கடல் தகவல் மையம் தெரிவித்துள்ளது. இதனால் மீனவர்கள் கடலோரப் பகுதிகளில் எச்சரிக்கையாக இருக்கும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் பேரலைகள் அடிக்கடி எழும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடலோரப் பகுதிகளில் ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Similar News

News April 19, 2025

நாகர்கோவிலில் 4,024 போக்குவரத்து விதிமுறை மீறல் வழக்கு

image

நாகர்கோவில் மாநகரப் பகுதியில் போக்குவரத்து ஆய்வாளர் வில்லியம் பெஞ்சமின் தலைமையில் போலீசார் தீவிர சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த 17 நாட்களில் மட்டும் நாகர்கோவில் மாநகரில் போக்குவரத்து விதிகளை மீறியதாக 4,024 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் மது போதையில் வாகனம் ஓட்டுதல், ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுதல், சாகசத்தில் ஈடுபடுதல் இந்த வழக்குகள் அதிகமாகும்.

News April 19, 2025

குமரி மாவட்டத்திற்கு 255.05 டன் கைத்தறி நூல் கொள்முதல்

image

கன்னியாகுமரி மாவட்ட நெசவாளர்களுக்காக கைத்தறி நூல் மத்திய அரசின் தேசிய கைத்தறி வளர்ச்சி கழகம் மூலம் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. கடந்த நிதியாண்டில் மட்டும் தேசிய கைத்தறி வளர்ச்சி கழகம் மூலம் 255.05 டன் கைத்தறி நூல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு கொள்முதல் செய்யப்படும் நூலுக்கு மத்திய அரசு 15 சதவீதம் வரை மானியமாக வழங்குகிறது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

News April 19, 2025

சப் இன்ஸ்பெக்டர் தேர்வுக்கான பயிற்சி வகுப்பு ஆட்சியர் தகவல்

image

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அழகுமீனா நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில்; சப் இன்ஸ்பெக்டர் தேர்வுக்கான பயிற்சி வகுப்பு நாகர்கோவில் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் இம்மாதம் 23ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது. இதில் சேர விரும்பும் மாணவர்கள் இணையதளத்தில் <>லிங்க்<<>> விண்ணப்பிக்கலாம். முதலில் வரும் 100 மாணவர்கள் மட்டுமே இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள முடியும் என்று கூறியுள்ளார். *ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!