News March 19, 2024
கிருஷ்ணகிரியில் துப்பாக்கி: கலெக்டர் அதிரடி உத்தரவு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உரிமம் பெற்று வைத்துள்ள துப்பாக்கிகளை அருகிலுள்ள காவல் நிலையங்களில் ஒப்படைக்குமாறு கலெக்டர் சரயு உத்தரவிட்டுள்ளார். நாடாளுமன்றத் தேர்தல் அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து நடத்தை விதிகள் நடைமுறைக்கு வந்துள்ளன. எனவே அனைத்து துப்பாக்கி உரிமைதாரர்களும் துப்பாக்கிகளை போலீசில் ஒப்படைக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.
Similar News
News April 8, 2025
கிருஷ்ணகிரியின் மினி ஊட்டி

தேன்கனிக்கோட்டை தாலுகாவில் உள்ளது பெட்டமுகிளாலம் கிராமம். கடல்மட்டத்தில் இருந்து 2800மீ உயரத்தில் பசுமையான இயற்கை சூழல் நிறைந்த இந்த பகுதி கிருஷ்ணகிரியின் ஊட்டியாக உள்ளது. இங்கிருந்து சிறிது தொலைவில் பஞ்சப்பள்ளி அணை, சாமி ஏரி ஐய்யூர்வன சுற்றுச்சூழல் மையம் காவிரி வடக்கு காட்டுயிர் காப்பகம் கேசரக்குலிஅணை சென்றசாமி கோவில் போன்றவை உள்ளது.இந்த லீவுக்கு போலாமானு உங்க நண்பருக்கு ஷேர் பண்ணி கேளுங்க
News April 8, 2025
காசநோய் இல்லா ஊராட்சிக்கு பாராட்டு சான்றிதழ்

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று காச நோய் இல்லாத ஊராட்சிக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது . நிகழ்வில் மாவட்ட ஆட்சித் தலைவர் தினேஷ்குமார் ஊத்தங்கரை அடுத்த கொண்டம்பட்டி ஊராட்சி காச நோய் இல்லாத ஊராட்சி நிலை அடைந்ததற்காக பாராட்டி, பாராட்டு சான்றிதழை ஊராட்சி செயலர் கிருபாகரனுக்கு வழங்கினார்.
News April 8, 2025
ரூ.1 லட்சம் வரை சம்பளம்; எப்படி விண்ணப்பிப்பது?

தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் (TIDCO)மூலம் மேனேஜர், நிறுவன செயலாளர் உள்ளிட்ட பதவிகள் நிரப்பப்படுகிறது. இதற்கு தகுதியும், ஆர்வமுள்ளவர்கள் வரும் 24ஆம் தேதிக்குள்<