News March 27, 2025
கிருஷ்ணகிரியில் சிறிய இங்கிலாந்து

கிருஷ்ணகிரியில் அமைந்துள்ளது இந்த தளி தோட்டம். இது கடல் மட்டத்திலிருந்து 1000 அடி உயரத்தில் அமைந்துள்ளதால் இதமான வானிலை நிலவுகிறது. இது இங்கிலாந்தின் தட்பவெப்ப நிலையை ஒத்திருப்பதால் ‘சிறிய இங்கிலாந்து’ என்று பிரிட்டிஷார் பெயர் சூட்டினார். இந்த காலநிலை காய்கறிகள், பழங்கள், பூக்கள் போன்றவற்றை பயிரிடுவதற்கு ஏற்றதாக அமைவதால் சுற்றுலாப் பயணிகள் இங்கு ஆண்டு முழுவதும் வருகிறார்கள். ஷேர் செய்யுங்கள்.
Similar News
News April 1, 2025
கிருஷ்ணகிரியில் புதிய சுற்றுலா மாளிகை அமைச்சர் தகவல்

ஓசூரில் ரூ 9.90 கோடி மதிப்பீட்டில் புதிய சுற்றுலா மாளிகை அமைக்கப்படும் என தமிழ்நாடு சட்டப்பேரவையில் தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு தெரிவித்துள்ளார். கிருஷ்ணகிரி சட்டமன்ற உறுப்பினர்களின் மானிய கோரிக்கைக்கு பதில் அளித்து பேசிய அமைச்சர் இதனை தெரிவித்தார். இதற்கு விரைவில் இடம் ஒதுக்கப்பட்டு நிதி ஒதுக்கப்படும் என அமைச்சர் சட்டப்பேரவை தெரிவித்தார். உங்க ஊர் மக்களுக்கு ஷேர் பண்ணுங்க
News April 1, 2025
சோதனை செய்த பிறகே தர்பூசணியை வாங்குங்கள்

கடைகளில் இருந்து தர்பூசணி பழங்கள் வாங்கும் போது மிகக் கவனமாக இருக்க வேண்டும். சோதனை செய்து பார்த்த பிறகே, தர்பூசணி பழத்தை வாங்குங்கள். ரசாயனம் சேர்க்கப்பட்ட தர்பூசணி பழங்கள் விரைவாக கெட்டு விடும் என்பதால், சில பழங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து அவற்றில் இந்த ரசாயனத்தை கலந்து ஜூஸ் போடுவதாகக் கூறப்படுகிறது. லாபம் அதிகம் சம்பாதிக்க வேண்டும் என்ற காரணத்திற்காக பழங்களில் ரசாயனங்கள் சேர்க்கப்படுகின்றன.
News April 1, 2025
ரசாயனம் கலந்த தர்பூசணியா? ஒரு டிஷ்யூ பேப்பர் போதும்

ரசாயனங்களை தண்ணீரில் கலந்து அதனை ஊசி மூலமாக தர்பூசணி பழங்களுக்குள் செலுத்துவதாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரி சதீஷ் குமார் அண்மையில் தெரிவித்தார். ரசாயனம் சேர்க்கப்பட்ட தர்பூசணி பழங்கள் அனைத்தும் பார்ப்பதற்கு மிகவும் சிவந்து போய் இருக்கும். அதன் மீது ஒரு டிஷ்யூ பேப்பரை வைத்து தேய்க்கும்போது, டிஷ்யூ பேப்பர் மீது ஆரஞ்சு அல்லது சிவப்பு நிறம் படிந்து இருந்தால் அதில் ரசாயனம் கலக்கப்பட்டிருக்கிறது.