News May 20, 2024
கிருஷ்ணகிரி: மதிப்பெண் குறைந்ததால் மாணவி தற்கொலை

ஊத்தங்கரை அடுத்த மூங்கிலேறியை சேர்ந்தவர் காளியப்பன். அவரது மகள் திருமலா கீழ்குப்பம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி இருந்த நிலையில் மதிப்பெண் குறைந்ததால் கடந்த 12ஆம் தேதி அவரது வீட்டில் தூக்கிட்டு கொண்டார். கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி இறந்தார். போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
Similar News
News April 19, 2025
கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை இரவு நேர ரோந்து பணி

கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை சார்பில் இன்று 19.04.2025 இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை கிருஷ்ணகிரி, பர்கூர், ஊத்தங்கரை, தேன்கனிகோட்டை மற்றும் ஓசூர் ஆகிய சுற்றுவட்டார பகுதிகளுக்கான இரவு நேர ரோந்து பணி செய்யும் அதிகாரியின் பெயர் மற்றும் அவர்களுடைய தொலைபேசி எண்ணும் காவல்துறை சார்பாக வெளியிடப்பட்டுள்ளது.
News April 19, 2025
உலக காதலர்களை சேர்க்கும் கிருஷ்ணகிரி ரோஜா

கிருஷ்ணகிரி மாவட்டம் ரோஜா சாகுபடிக்கு புகழ் பெற்ற மாவட்டமாகும். தேன்கனிக்கோட்டை, தளி, பாகலூர் போன்ற பகுதிகளில் ரோஜாக்கள் பயிரிடப்படுகின்றன. இங்கிருந்து ரோஜாக்கள் ஒவ்வொரு ஆண்டும் காதலர் தின சமயத்தில் வெளிநாடுகளுக்கு அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதன் தனித்துவம் கருதியே இதற்கு மத்திய அரசு புவிசார் குறியீடு வழங்கியுள்ளது. ஷேர் பண்ணுங்க
News April 19, 2025
கிருஷ்ணகிரி முக்கிய தொடர்பு எண்கள்

கிருஷ்ணகிரி மாவட்ட அரசு துறை அலுவலர்களின் தொலைபேசி எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன. மாவட்ட ஆட்சியர் 04343239400, மாவட்ட வருவாய் அலுவலர் 04343231300, திட்ட அலுவலர் 04343239364, மாவட்ட ஆதி திராவிடர் நல அலுவலர் 04343239030, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் 04343235655, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் 04343235591, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் 04343238777. ஷேர் பண்ணுங்க