News February 13, 2025

கிராமப்புற பெண்களுக்கு ட்ரோன் பயிற்சி

image

கிராமப்புறங்களில் பயிர் சாகுபடியில் ட்ரோன் பயன்படுத்த மத்திய அரசு, மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ட்ரோன் வழங்கும் திட்டத்தை அறிவித்தது, பயிற்சி அளித்தது. இத்திட்டத்தின் கீழ், காஞ்சிபுரம் மாவட்டத்தில்,  கிளார் ஊராட்சியில் மகளிர் சுய உதவிக்குழுவுக்கு பயிற்சி அளிகப்பட்டு, ட்ரோன் வழங்கப்பட்டுள்ளது. விவசாயிகள், இக்குழுவை 8248716615 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Similar News

News February 14, 2025

காஞ்சிபுரம் எம்எல்ஏ முதலமைச்சருடன் சந்திப்பு

image

சென்னை அண்ணா அறிவாலயத்தில் டெல்லியில் யுஜிசியை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தி முடித்தது தொடர்பாக திமுக மாணவர் அணி செயலாளரும், காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினருமான சி.வி.எம்.பி. எழிலரசன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். இதில் மூத்த அமைச்சர்கள் உடனிருந்தனர்.

News February 13, 2025

மஞ்சப்பை விருது 2025 மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

2022-23 நிதியாண்டிற்கான மஞ்சப்பை விருதுகள் சட்டமன்றக் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது. அதன்படி, தங்கள் வளாகத்தை பிளாஸ்டிக் இல்லாததாக மாற்றும் 3 பள்ளிகள், 3 கல்லூரிகள், 3 வணிக நிறுவனங்களுக்கு பரிசு வழங்கப்படும். முதல் பரிசு ரூ.10 லட்சம், 2ஆம் பரிசு ரூ.5 லட்சம், 3ஆம் பரிசு ரூ.3 லட்சம். விண்ணப்பப் படிவத்திற்கு <>இங்கே<<>> க்ளிக் செய்யவும்.

News February 13, 2025

கோல் இந்தியா நிறுவனத்தில் 434 காலிப்பணியிடங்கள்

image

மத்திய அரசின் கோல் இந்தியா நிறுவனத்தில் உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 434 மேனேஜ்மெண்ட் டிரைய்னி பணியிடங்கள் உள்ளன. கணினி வழி தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். ரூ.50,000 – ரூ.1,60,000 வரை சம்பளம் வழங்கப்படும். 1 வருட பயிற்சிக்கு பின்னர் ரூ.60,000 – ரூ.1,80,000 வரை சம்பளம் நிர்ணயிக்கப்படும். நாளைக்குள் (பிப்.14) <>லிங்கை க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

error: Content is protected !!