News March 5, 2025
காவல்துறையினர் மிரட்டுவதாக ஆணையரிடம் மனு

கோவை, பேரூரைச் சேர்ந்தவர் சத்யா. இவரது கணவர் விஜயன். இவர் மரம் வெட்டும் தொழில் செய்து வருகிறார். இவர் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னர் சந்தன மரத்தை வெட்டியதாக வடவள்ளி காவல்துறையினர் விசாரணைக்காக தற்போது அழைத்துள்ளனர். ஆனால் காவல்துறையினர் தங்களை கட்டாய படுத்தி ஒத்து கொள்ள சொல்லி மிரட்டுவதாக இன்று கோவை மாநகர காவல் ஆணையர் சரவண சுந்தரை சந்தித்து மனு அளித்துள்ளனர்.
Similar News
News April 21, 2025
கோவை மாவட்ட வட்டாட்சியர் அலுவலக எண்கள்!

▶️கோவை (தெ) வட்டாட்சியர் 0422-2214225. ▶️கோவை (வ) வட்டாட்சியர் 0422-2247831. ▶️மேட்டுப்பாளையம் வட்டாட்சியர் 0425-4222153. ▶️சூலூர் வட்டாட்சியர் 0422-2681000. ▶️அன்னூர் வட்டாட்சியர் 0425-4299908. ▶️பேரூர் வட்டாட்சியர் 0422-2606030. ▶️மதுக்கரை வட்டாட்சியர் 0422-2622338. ▶️கி.கடவு வட்டாட்சியர் 04259-241000. ▶️ஆனைமலை 0425-3296100. ▶️பொள்ளாச்சி 04259-226625. ▶️வால்பாறை 0425-3222305. SHARE பண்ணுங்க.
News April 21, 2025
கோவையில் தவெக பூத் கமிட்டி மாநாடு

தவெக பூத் கமிட்டி மாநாடு, வரும் 26,27 ஆகிய தேதிகளில், கோவை சரவணம்பட்டி அருகே உள்ள தனியார் கல்லூரியில் நடைபெறவுள்ளது. இதில் கட்சியின் தலைவர் விஜய் கலந்துகொண்டு, மேற்கு மாவட்ட வாக்குச்சாவடி முகவர்களுடன் பேசவுள்ளார். இதில் 2026 சட்டமன்ற தேர்தல் களப்பணிகள் குறித்தும், அது தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய கடமைகள் குறித்தும், பூத் கமிட்டி நிர்வாகிகளுக்கு விளக்கவுரை ஆற்றவுள்ளார்.
News April 21, 2025
கோவை: சம்ஹாரீஸ்வர பைரவர் கோயில்

கோவை, ஆலாந்துறை, நாதேகவுண்டன்புதூரில், கால சம்ஹாரீஸ்வர பைரவர் திருக்கோவில் அமைந்துள்ளது. 8 வாகனங்களில் 8 வகையான கால பைரவர்கள், சம்ஹார பைரவர்களாக இங்கு வீற்றிருக்கின்றனர். சக்திவாய்ந்த கால பைரவரை அஷ்டமி நாளான இன்று, 11 தீபங்கள் ஏற்றி, வணங்கினால், கடன் பிரச்சனைகள் முற்றிலும் நீங்குமாம். கடனில் சிக்கியுள்ள உங்களது நண்பர்களுக்கு இதை SHARE பண்ணுங்க.