News May 19, 2024

கார் விபத்தில் குமரியை சேர்ந்தவர் பலி

image

நெல்லை, வள்ளியூரில் சாலையில் சென்று கொண்டிருந்த கார், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்ததில் தலை குப்புறக் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இவ்விபத்தில் குமரி மாவட்டம் மருங்கூரை சேர்ந்த நவீன் என்பவர் சம்பவயிடத்திலே உயிரிழந்தார். மேலும், 2 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மழையால் சாலையில் தண்ணீர் தேங்கிய நிலையில், வாகனம் நிலை தடுமாறி பாலத்தின் மீது மோதியதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

Similar News

News April 20, 2025

கன்னியாகுமரி மாவட்ட இன்றைய முக்கிய நிகழ்வுகள்

image

காலை 9.30 மணி – பூதப்பாண்டி பேரூராட்சி ஈசாந்திமங்கலம் ஊராட்சி, இறச்சகுளம் ஊராட்சி பகுதிகளுக்கு குடிநீர் வழங்குவதை நிறுத்தியதை கண்டித்து இறச்சகுளம் சந்திப்பில் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது. மாலை மணி – வக்பு வாரிய சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி கோட்டாறு பாவா காசிம் திடலில் ஜமாத் கூட்டமைப்பு சார்பில் பொதுக்கூட்டம் நடக்கிறது.

News April 20, 2025

குமரி: கடனை திருப்பி கேட்டவருக்கு அரிவாள் வெட்டு

image

சந்தையடி தேரிவிளையைச் சேர்ந்தவர் ஹரிஹரசுதன். இவர் ஜேசிபி ஓட்டும் தொழில் செய்து வருகிறார். இவரது நண்பர் ஆதிராஜனுக்கு 30 ஆயிரம் ரூபாய் ஹரிஹரசுதன் கடன் கொடுத்துள்ளார். அந்தப் பணத்தை ஹரிஹரசுதன் கேட்ட நிலையில் ஆத்திரம் அடைந்த ஆதிராஜன் அவரை அரிவாளால் வெட்டியுள்ளார். கன்னியாகுமரி போலீசார் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து ஆதிராஜனை கைது செய்தனர்.

News April 19, 2025

உயிரிழந்த 22 மாணவ மாணவிகளுக்கு அதிமுக அஞ்சலி

image

நீட் ரத்து செய்ய ரகசியம் இருப்பதாக பொய் கூறி ஆட்சிக்கு வந்ததாக திமுக அரசை கண்டித்தும், நீட் தேர்வால் இன்னுயிரை இழந்த 22 மாணவ, மாணவிகளுக்கு இன்று மாலை (19.4.2025) நாகர்கோவில் அண்ணா ஸ்டேடியம் அருகில் திமுக மாணவர் அணி சார்பில் முன்னாள் அமைச்சர் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளர் தளவாய் சுந்தரம் தலைமையில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

error: Content is protected !!