News March 20, 2025

காசிக்கு நிகரான தேனியின் பெரிய கோவில்

image

தேனி மாவட்டதிலேயே பரப்பளவில் பெரியதாக பெரியகுளம் பாலசுப்ரமணியசுவாமி திருக்கோவில் உள்ளது.ராஜேந்திர சோழன் கட்டிய இந்த கோவிலில் மூலவராக சிவன் இருந்தாலும் முருகன் தான் பிரசித்தி பெற்றவர்.இங்குள்ள வராக நதியில் நீராடி முருகனை வழிபட்டால் தீராத நோய்களும் தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.காசியை போன்று நதியின் இருபுறமும் நேரெதிரே ஆண் பெண் மருத மரங்கள் அமைந்துள்ளது சிறப்பு .

Similar News

News March 28, 2025

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் வேலை

image

குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறையின் மிஷன் வத்சால்யா திட்டத்தின் கீழ், தேனி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் காலியாகவுள்ள சமூகப்பணியாளர் பணியிடத்தினை ஓராண்டு காலம் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்படவுள்ளது. மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் அணுகி பயன் பெற்றுக் கொள்ளலாம் என தேனி கலெக்டர் ரஞ்ஜீத் சிங் தெரிவித்துள்ளார்.

News March 28, 2025

தேனி புத்தகத் திருவிழா ஏப்.1 வரை நீட்டிப்பு

image

தேனியில் புத்தக திருவிழா மார்ச் 23ல் துவங்கியது. தினமும் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள், பேச்சாளர்கள் பங்கேற்கும் சிந்தனை அரங்கம் நடந்து வருகிறது. புத்தக திருவிழா மார்ச் 30ல் நிறைவு பெறுவதாக இருந்தது. இந்நிலையில் பல்வேறு தரப்பில் இருந்தும் புத்தக திருவிழாவை நீட்டிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இதையடுத்து புத்தக திருவிழாவை ஏப்.,1 வரை நீட்டித்து கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்

News March 27, 2025

தேனியில் நீச்சல் பயிற்சி முகாம் 

image

தேனி மாவட்டத்தில் நீச்சல் பயிற்சி முகாம் 01.04.2025 முதல்  08.06.2025 வரை 5 கட்டங்களாக தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பாக  நடைபெற உள்ளது. இந்த பயிற்சியில் விருப்பம் உள்ள மாணவ மாணவிகள் 1200 ரூபாய் கட்டணம் செலுத்தி பயிற்சி மேற்கொள்ளலாம் . மேலும் விபரங்களுக்கு தேனி மாவட்ட விளையாட்டு அரங்க அலுவலகத்தில் தொடர்பு கொள்ளலாம் என தேனி மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார்.

error: Content is protected !!