News April 7, 2024
கள்ளக்குறிச்சி: வயிற்று வலியால் பெண் தற்கொலை

திருக்கோவிலுார் அடுத்த அத்தண்டமருதுார் கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடாசலம், மனைவி சுமதி(45). இவருக்கு, கர்ப்பப்பை அகற்றப்பட்ட நிலையில் தொடர்ந்து வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். நேற்று முன்தினம் மதியம் வலி அதிகமானதால் மனமுடைந்த அவர் பூச்சி மருந்தை குடித்து மயங்கினார். இதையடுத்து அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இதுகுறித்து திருக்கோவிலுார் போலீசார் விசாரிக்கின்றனர்
Similar News
News April 18, 2025
சமையல் உதவியாளர் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

கள்ளக்குறிச்சியில் காலியாக உள்ள 309 சமையல் உதவியாளர் பணியிடங்களை நிரப்பப்பட உள்ளன. 21 – முதல் 40 வயது வரையுள்ள பெண்கள் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும். கணவரை இழந்த, கைவிடப்பட்ட பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். 10ஆம் வகுப்பு படித்த, தமிழில் சரளமாக பேச தெரிந்திருக்க வேண்டும். ஊராட்சி ஒன்றிய அலுவலகம்/ மாநகராட்சி/ நகராட்சி அலுவலகம் ஆகியவற்றில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். <
News April 18, 2025
டிராக்டர் மீது மோதி கூலி தொழிலாளி மரணம்

சின்னசேலம் அடுத்த குரால் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாய கூலி காமராஜ். இவர் நேற்று காலை அதே பகுதியை சேர்ந்த மாரிமுத்து,என்பவருடன் மொபட்டில், வீர பயங்கரம் பிரிவு சாலை அருகே சென்ற போது, முன்னால் சென்ற டிராக்டர், திடீரென நின்றது. இதனால் பின்னால் சென்ற மொபட், எதிர்பாராதவிதமாக டிராக்டர் மீது மோதியதில், காமராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்து சின்னசேலம் போலீசார் வழக்கு.
News April 18, 2025
கள்ளக்குறிச்சியில் இளைஞர் தற்கொலை

ராஜஸ்தான் மாநிலம், இந்திரானா பகுதியை சேர்ந்த மால்சிங் மகன் சந்தன்சிங்,(18). இவர் கள்ளக்குறிச்சி, துருகம் சாலையில் உள்ள ஸ்டிக்கர் கடையில் வேலை செய்து வந்தார். இந்நிலையில் நேற்று இரவு, அவர் தங்கியிருந்த வீட்டில் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். கள்ளக்குறிச்சி போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.