News April 7, 2025
கலெக்டர் அலுவலகத்தில் 673 மனுக்கள் குவிந்தது

திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமையில் மக்கள் குறை தீர்க்கும்நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 673 மனுக்களை அளித்துள்ளனர். சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் இதனை பரிந்துரை செய்ய கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
Similar News
News April 8, 2025
திருப்பூர் அங்காளம்மன் கோயில்

திருப்பூர், முத்தனம்பாளையத்தில் புகழ்பெற்ற அங்காளம்மன் கோயில் உள்ளது. சுயம்பு மூர்த்தியாக, மிகவும் சக்திவாய்ந்த தெய்வமாக வீற்றிருக்கும் அங்காளம்மனை வணங்கினால், திருமணத்தடை நீங்குவதோடு, குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிட்டுமாம். அமாவாசை, பெளர்ணமி போன்ற நாட்களில், அம்மனை சென்று வணங்கி வந்தால், குடும்ப பிரச்சனைகள் முற்றிலும் நீங்குமாம். குடும்ப பிரச்சனை உள்ளவர்களுக்கு இத SHARE பண்ணுங்க.
News April 8, 2025
திருப்பூரில் வேலை வாய்ப்பு

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் (Intern Trainee Associate)உள்ள காலி பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு வேலைவாய்ப்பு (ம) பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு ஊதியம் ரூ.15,000 ஆகும். டிகிரி முடித்துவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள்<
News April 7, 2025
திருப்பூரில் ஆதார் கார்டை ஒப்படைக்க வந்த மக்கள்

திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட வீரபாண்டி பகுதி குறவர் காலணியில் 300க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பாக பெய்த கனமழையின் காரணமாக அப்பகுதியில் தண்ணீர் தேங்கி உள்ள சூழ்நிலையில் அதனை அப்புறப்படுத்த மாவட்ட நிர்வாகம் மாநகராட்சி நிர்வாகமும் நடவடிக்கை எடுக்காததால் தங்கள் ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்களை ஆட்சியரிடம் ஒப்படைக்க வந்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.