News September 15, 2024

கரூர்: கொலை மிரட்டல் விடுத்த போலீஸ் மீது வழக்கு

image

கரூர்: ஆண்டாங்கோவில் பெரியார் நகரை சேர்ந்த ஜெகன்ராஜ் (32) பழநி ஆயுதப்படையில் போலீசாக வேலை செய்கிறார். இவர் மண்மங்கலம் பகுதியை சேர்ந்த திருமணமான தனது சிறுவயது தோழிக்கு போன் செய்துள்ளார். அவர் போனை எடுக்காததால் இளம்பெண் வீட்டுக்கு சென்று இரும்பு கம்பியை காட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். பெண் கொடுத்த புகார்படி கரூர் டவுன் போலீசார் ஜெகன்ராஜ் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Similar News

News August 7, 2025

கரூர்: கஞ்சா விற்பனை குறித்து புகார் அளிக்கலாம்!

image

கரூர் நகர காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்தால் சட்டப்படியான கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. யாரேனும் கஞ்சா போதை பொருட்களை விற்றாலோ, வைத்திருந்தாலோ, கீழ்கண்ட தொலைபேசி எண்களுக்கு தகவல் தருமாறு பொது மக்களிடம் கேட்டுக்கொள்ளப்படுகிறது. தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் காவல் துறை ஆய்வாளர் 99429-04717 சார்பு ஆய்வாளர் 94981-61773 ஆகிய எண்களில் புகார் கொள்ளலாம்.

News August 6, 2025

கரூர் மாநகராட்சி மாமன்ற கூட்டம்

image

கரூர் மாநகராட்சி அலுவலகத்தில் மாநகராட்சி மேயர் கவிதா கணேசன் தலைமையில் மாமன்ற கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநகராட்சி ஆணையர் சுதா, துணை மேயர் சரவணன், மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் அலுவலர்கள் பங்கேற்றனர். இந்த மாமன்ற கூட்டத்தில் கரூர் மாநகராட்சிக்கு செய்யப்பட வேண்டிய அடிப்படை வசதிகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

News August 6, 2025

கரூர்: கூட்டுறவு வங்கிகளில் வேலை.. ரூ.96,000 சம்பளம்!

image

கரூர் மாவட்டத்தில், கூட்டுறவு வங்கிகள் மற்றும் சங்கங்களில் காலியாக உள்ள 43 உதவியாளர், மேற்பார்வையாளர் பணியிடங்களை நிரப்புவதற்காக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு சம்பளமாக ரூ.96,395 வரை வழக்கப்படுகிறது. இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <>கிளிக் <<>>செய்யவும். விண்ணப்பிக்க கடைசி தேதி 29.08.2025 ஆகும். இதை வேலை தேடும் அனைவருக்கும் SHARE பண்ணுங்க. ஒருவருக்காவது உதவும்!

error: Content is protected !!