News April 9, 2025
கன்னியாகுமரி மாவட்ட இன்றைய முக்கிய நிகழ்வுகள்

காலை 10 மணி – சமையல் எரிவாயு மற்றும் பெட்ரோல் கலால் வரி உயர்த்தப்பட்டுள்ளவை கண்டித்து நாகர்கோவில் மாநகராட்சி பூங்கா முன்பு CPI(M)சார்பில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது. காலை 11 மணி – வக்பு வாரிய சட்டத்தை ரத்து செய்யக்கோரி CPI(ML) Red flagசார்பில் அண்ணா விளையாட்டரங்கம் முன்பு ஆர்ப்பாட்டம் நடக்கிறது. காலை 9:15 மணி – பறக்கை மதுசூதன பெருமாள் கோவில் தேரோட்டம் நடக்கிறது.
Similar News
News April 19, 2025
குமரி மாவட்டத்திற்கு 255.05 டன் கைத்தறி நூல் கொள்முதல்

கன்னியாகுமரி மாவட்ட நெசவாளர்களுக்காக கைத்தறி நூல் மத்திய அரசின் தேசிய கைத்தறி வளர்ச்சி கழகம் மூலம் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. கடந்த நிதியாண்டில் மட்டும் தேசிய கைத்தறி வளர்ச்சி கழகம் மூலம் 255.05 டன் கைத்தறி நூல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு கொள்முதல் செய்யப்படும் நூலுக்கு மத்திய அரசு 15 சதவீதம் வரை மானியமாக வழங்குகிறது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
News April 19, 2025
சப் இன்ஸ்பெக்டர் தேர்வுக்கான பயிற்சி வகுப்பு ஆட்சியர் தகவல்

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அழகுமீனா நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில்; சப் இன்ஸ்பெக்டர் தேர்வுக்கான பயிற்சி வகுப்பு நாகர்கோவில் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் இம்மாதம் 23ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது. இதில் சேர விரும்பும் மாணவர்கள் இணையதளத்தில் <
News April 19, 2025
நாகர்கோவில் தண்டவாளத்தில் ஆண் சடலம் மீட்பு

நாகர்கோவில் நெல்லை ரயில் பாதையில் மறுகால் குறிச்சி தண்டவாளப்பகுதியில் சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் காயங்களுடன் கண்டறியப்பட்டுள்ளது, தகவல் அறிந்த நாகர்கோவில் ரயில்வே போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் நேற்று வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.