News March 12, 2025
கன்னியாகுமரி மாவட்ட இன்றைய முக்கிய நிகழ்வுகள்

#இன்று(மார்ச் 12) காலை 10 மணிக்கு அரசின் சலுகைகளை ஊராட்சி செயலர்களுக்கு விரிவுபடுத்தி அரசாணை வழங்க கேட்டு நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஊராட்சி செயலாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது.#காலை 10 மணிக்கு ஓய்வூதியர்களின் 9 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி வேப்பமூடு பூங்கா முன்பு ஓய்வுபெற்ற பள்ளி கல்லூரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் நடக்கிறது.
Similar News
News March 12, 2025
குமரியில் வேலை தேடுவோர் கவனத்திற்கு

குமரி மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் சார்பில், இம்மாதம் 22ஆம் தேதி நாகர்கோவில் பயோனியார் குமார் சுவாமி கல்லூரியில் காலை 9 மணி முதல் 2 மணி வரை தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.இதில் 100க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் 5000க்கும் மேற்பட்ட காலி பணியிடங்களை நிரப்புவதற்கு தேர்வினை நடத்துகிறது என ஆட்சியர் தெரிவித்தார். நண்பருக்கு பகிரவும்
News March 12, 2025
குமரி-பெங்களூர் ரயில் பெங்களூர் கிழக்கு ரயில் நிலையத்தில் நிற்காது

பெங்களூர் கிழக்கு ரயில் நிலையத்தில் 3 மற்றும் 4 ரயில் பாதைகள் அமைப்பதற்கான தளங்கள் இடிக்கப்பட்டுள்ளதால், இந்த நிலையத்தில் பயணிகளை கையாள முடியாது என்பதை தொடர்ந்து கன்னியாகுமரி கே எஸ் ஆர் பெங்களூர் விரைவு ரயில் நாளை (மார்ச் 13) முதல் பெங்களூர் கிழக்கு ரயில் நிலையத்தில் நிற்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த அறிவிப்பு வரும் வரை அந்த ரயில் நிலையத்தில் தற்காலிக நிறுத்தம் நீக்கப்படுகிறது. share it
News March 12, 2025
ஆற்றுக்கால் பொங்கல் விழா – சிறப்பு ரயில்கள் இயக்கம்

திருவனந்தபுரம் ஆற்றுக்கால் பகவதியம்மன் கோவில் பொங்கல் விழாவில் முக்கிய நிகழ்ச்சியான பொங்கல் வழிபாடு நாளை(மார்ச் 13) தொடங்குகிறது. இதையொட்டி பக்தர்களின் வசதிக்காக தெற்கு ரெயில்வே சார்பில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இது தொடர்பாக தெற்கு ரெயில்வேயின் திருவனந்தபுரம் கோட்ட தலைமை அலுவலக செய்திக் குறிப்பில் இன்று கூறப்பட்டுள்ளது. நாகர்கோவில், கன்னியாகுமரிக்கும் ரயில்கள் இயக்கப்படுகின்றன.