News May 16, 2024
கன்னியாகுமரி: குடிநீர் விநியோகம் நிறுத்தம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் முக்கடல் அணையிலிருந்து கிராம புற பகுதிகளுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இறச்சகுளம், ஈசாந்திமங்கலம், நாவல்காடு மற்றும் புத்தேரி ஆகிய கிராமங்களுக்கு எந்தவித முன்னறிவிப்பும் இன்றி நேற்று இரவு முதல் முக்கடல் குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் குடிநீர் இன்றி பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
Similar News
News August 8, 2025
கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரிக்கு புதிய டீன் நியமனம்

கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி டீனாக லியோ டேவிட் இன்று நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி துணை முதல்வராக பணியாற்றி வந்த நிலையில் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் ஆக நியமிக்கப்பட்டிருந்தார். தற்போது அங்கிருந்து கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீனாக மாற்றப்பட்டுள்ளார்.
News August 8, 2025
குமரி: படகு சேவைக்கு ஆன்லைன் மூலம் பயண சீட்டு!

குமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு இணைய வழி படகுபயணசீட்டு வசதி தொடக்க விழா இன்று(ஆக.8) நடந்தது. இதில் அமைச்சர் மனோதங்கராஜ் கலந்துகொண்டு இணைய வழி சேவையை தொடங்கி வைத்தார். இதில் கலெக்டர் அழகு மீனா, உணவு ஆணையத்தலைவர் சுரேஷ்ராஜன், மேயர் மகேஷ், பொது மேலாளர் தியாகராஜன், மேலாளர் முருக பூபதி, நகராட்சி தலைவர் குமரி ஸ்டீபன் உட்பட திமுக பிரமுகர்கள் பலர் பங்கேற்றனர்.
News August 8, 2025
சுதந்திர தின விழா – குமரியில் 95 ஊராட்சிகளில் கிராம சபைக் கூட்டம்

சுதந்திர தின விழாவை அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 95 கிராம ஊராட்சிகளில் கிராம சபை கூட்டங்கள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. கிராம மக்கள் பங்கேற்கும் வகையில் இடம் மற்றும் நேரத்தை கிராம ஊராட்சி முன்கூட்டியே தெரிவித்து ஊராட்சியின் பொது நிதியிலிருந்து மேற்கொள்ளப்பட்ட செலவின அறிக்கை விவரங்களை கூட்டத்தில் படித்துக் காட்டி ஒப்புதல் பெற வேண்டும் என்று அரசு தெரிவித்துள்ளது.