News March 28, 2024
கன்னியாகுமரி அருகே இளம்பெண் தற்கொலை

மார்த்தாண்டம் அடுத்த பழுக்கல் பகுதியை சேர்ந்தவர் அபிலாஷ் (40) எலக்ட்ரீசியன், இவரது மனைவி சித்ரா தேவி (36) வீட்டில் தூக்கில் சடலமாக கிடந்தார். இதுகுறித்து கணவர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சடலத்தை கைபற்றி மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி விசாரித்து வருகின்றனர்.
Similar News
News April 14, 2025
குலசேகரத்தில் புத்தகக் கண்காட்சி ஏராளமானோர் பங்கேற்பு

குலசேகரம் கான்வென்ட சந்திப்பு மனுவேல் மண்டப வளாகத்தில் NCBH புத்தக நிலையம் சார்பில் இன்று தமிழ்ப் புத்தாண்டு மற்றும் அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு புத்தகக் கண்காட்சி நடைபெற்று வருகிறது. இந்த புத்தக கண்காட்சியில் பல்வேறு வகையான புத்தகங்கள் இடம் பெற்றுள்ளன. புத்தக கண்காட்சியை அப்பகுதியில் உள்ள ஏராளமானவர்கள் வந்து பார்வையிட்டு புத்தகங்களை வாங்கிச் சென்றனர்.
News April 14, 2025
குமரியில் 2.68 லட்சம் பேருக்கு புற்றுநோய் பரிசோதனை

கன்னியாகுமரி மாவட்டத்தில் 2 லட்சத்து 68 ஆயிரத்து 920 பேருக்கு புற்றுநோய் தொடர்பான ஆரம்ப கட்ட பரிசோதனை அரசு மருத்துவமனைகளில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் 6,538 பேருக்கு புற்றுநோய் வருவதற்கான ஆரம்ப அறிகுறிகள் கண்டறியப்பட்டு மேல் சிகிச்சைக்காக பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதில் 133 பேர்க்கு புற்றுநோய் இருப்பது தெரியவந்துள்ளதாக ஆட்சியர் அழகு மீனா வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News April 14, 2025
செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் 7944 பேர் கணக்கு தொடங்கினர்

கன்னியாகுமரி மாவட்டத்தில் பெண் குழந்தைகளின் நலனுக்காக மத்திய அரசு செல்வமகள் சேமிப்பு திட்டம் அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் 10 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகளுக்காக ஒரு நிதி ஆண்டுக்கு 250 முதல் அதிகபட்சம் ஒன்றரை லட்சம் ரூபாய் வரை செலுத்தி கணக்கு தொடங்கலாம். இந்த திட்டத்தில் குமரி மாவட்டத்தில் கடந்த நிதியாண்டு 7,944 பேர் கணக்குத் தொடங்கியுள்ளதாக தபால் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.