News December 12, 2024
கனமழையால் பட்டாசு உற்பத்தி பாதிப்பு

சிவகாசி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று காலை முதல் தொடர்ந்து விட்டுவிட்டு கனமழை பெய்து வருகிறது. இதனால் இன்று சிவகாசி பகுதிகளில் உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகளில் உற்பத்தி நிறுத்தப்பட்டது. மேலும், நாளை விருதுநகர் மாவட்டத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால் நாளையும் பட்டாசு உற்பத்தி நடைபெறுவது கேள்விக்குறியாகியுள்ளது.
Similar News
News May 8, 2025
அரசு கல்லூரிக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்

விருதுநகர் மாவட்ட அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ள மாணவர்கள் விருதுநகர் மாவட்ட அரசு கலை மற்றும் அறிவியல் பிரிவு இளங்கலை பட்டப் படிப்புக்கு https://www.tngasa.in/ இணையதளத்தில் 07.05.2025 முதல் 27.05.25 வரை விண்ணப்பிக்கலாம். திருவில்லிபுத்தூர், சிவகாசி, சாத்தூர், அருப்புக்கோட்டை மற்றும் திருச்சுழி ஆகிய இடங்களில் அரசு கல்லூரிகள் உள்ளன.
News May 7, 2025
விருதுநகர் : காவல்துறை அதிகாரிகளின் தொடர்பு எண்கள்

விருதுநகர் மாவட்ட காவல்துறை அதிகாரிகளின் தொடர்பு எண்கள்
▶️விருதுநகர் SP- கண்ணன் – 9940277199
▶️அருப்புக்கோட்டை DSP – மதிவண்ணன் -9894364326
▶️ராஜபாளையம் ம் DSP – ப்ரீத்தி – 9884215769
▶️சாத்தூர் DSP – நாகராஜன் – 9498784040
▶️சிவகாசி DSP – பாஸ்கர் -9840211811
▶️ஸ்ரீவில்லிபுத்தூர் DSP – ராஜா -8300002059
உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். (அவசிய தேவைக்கு மட்டும்)
News May 7, 2025
விருதுநகர்: வேலைவாய்ப்பு முகாம்

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் உள்ள S.H.N எட்வர்ட் மேல்நிலைப் பள்ளியில் அரசு சார்பில் வேலைவாய்ப்பு முகாம் நடக்க உள்ளது. சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் 20க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு 100க்கும் மேற்பட்ட தகுதியான நபர்களை தேர்வு செய்ய உள்ளனர். முகாமில் கலந்து கொள்ள <